Thursday 10 May 2018

மௌனம்

விழிகள்
சில
நேரம் மௌனமாகட்டும்.....

நீ
என்னை
கடந்துச் செல்லும் ..

அந்த
ஒரு நொடி
பொழுதேனும்.....

Wednesday 9 May 2018

தனிமை ....

உன்
மௌன
வார்த்தைகளால்.....

ஆயிரம்
அர்த்தங்கள் உணர்ந்தேன்,,,,

உன்
தனிமை பார்வையில்...
மீண்டும்
ஆயிரம் அர்த்தங்கள் உணர்ந்தேன்.....

இப்போது
நீ தந்த
தனிமையில் .....

ஒற்றை
அர்த்தம் மட்டும்
உணர்கின்றேன்.....

உன்
நினைவுகள்
உன்னைப் போல்
தனித்துவிட்டுச்
செல்லாது என்றே,....

அன்புடன்
மேலூர் ராஜா....

வாழ்க்கை

வலிகள் நிறைந்த
வாழ்க்கையை
வாழ
கற்றுக்கொடுத்துவிட்டாய்....

புன்னகையோடு
நீ
பேசிய தருணங்கள்....

இப்பொழுது
நினைவுகளாக என்னுள்,,...

நீ
அளித்த
செல்லக் குட்டல்கள்,,,,

இப்பொழுது
நினைவுகளான என்னுள்.....

நீ
அளித்த
சில நொடி மௌனம் ....

இப்பொழுது
என்னுள் நினைவுகளாக,,,,

உன்னைவிட்டு
ஒரு
நொடிக்கூட
பிரிய மாட்டேன் என
நீ கூறிய
வார்த்தைகள் மட்டும் ....

இப்பொழுதும்
என்னுள் நிஜங்களாக ....

உன்
நினைவுகளால்
ஒரு நொடிக் கூட
என்னை விட்டு
பிரியாமல்
நீ
இருப்பதால் .....

அன்புடன்
மேலூர் ராஜா.....

Monday 7 May 2018

கனவில் உன்னுடன்

சில நேரம்
விடியல்
இல்லாமலேயே
போகட்டும் ....

நீ
என்னுடன்
இல்லை என்பதை
மறந்து .....

உன்னிடம்
பேசிக்கொண்டிருப்பதால்
கனவில்,.,.....

அன்புடன்
மேலூர் ராஜா

மீண்டும் நிகழ வேண்டும் ..

தாயின்
கருவறையில்
உதிர்த்த நான்.....

உன்
விழிப்பார்வை
கிடைக்க வேண்டியே.
பிறப்பெடுத்தேன்.....

கரம் பற்றியே
நெடுந்தூரச் சாலையில்
பயணம் எதுவென்று
தெரியாமல் பயணித்தோம்....

இப்பொழுது
என் நிழல் மட்டுமே
என்னுடன் ....

பற்றிக் கொண்டுச்சென்ற
கரங்கள் வேண்டுமானால்
தனித்துவிட்டுச்
சென்றிருக்கலாம்,,...

ஆனால்
நினைவுகள் இல்லை.....
அது
எப்பொழுதும்
என்னுடனையே...
வழித் துணையாக,,...

மரணிக்கும் முன்
மீண்டுமொருமுறை
நிகழ வேண்டும் .....

உன் மடி
நான் சாய்ந்து
உன்
கரங்கள்
மீண்டுமொருமுறை
என்
தலைமுடியினை கோதிவிட வேண்டும்......

அன்புடன்
மேலூர் ராஜா...

Friday 4 May 2018

பேசிய நினைவுகள்

உனது
இதழ்கள்
விரித்துடும்
ஒவ்வொரு மணித்துளியும்....

என்னூள்
ஆயிரம்,ஆயிரம்
உயிரோட்டம்
நிகழ்த்தியிருக்கின்றது....

உன்னோடு
பேசிக் கொண்டிருந்த தருணத்தில்
நேரம்
பல கடந்துச் சென்றதும் ...

நன்மைக்கே
என,
இப்போது
உணர்த்தி விட்டாய்....

உன்னுடன் ஆன
நினைவுகளை
நான்
சுமந்திருக்கும் ...

இந்த
தருணங்கள் கூட
நினைவுகளால்
நான் ஆறுதல்
அடைய.....

அன்புடன்
மேலூர் ராஜா.,,,,

உனது பிரிவு

நீ,...
மௌனம் மூலம்
அறிமுகமான பொழுது
எனக்கு தெரியவில்லை ....

எனது
வாழ்க்கையும்
மௌனமாகும் என்று.....

நம்
காதல்
பயணத்தில்,....

ஆண்டுகள் பல
கடந்திருந்தாலும்....

இரண்டு, மூன்று
முறையேனும் மட்டுமே
முகம்
அறிந்து பேசியிருப்போம்.....

ஆனாலும்
ஒரு நொடி பொழுதேனும்
பேசாமல் இருந்ததில்லை....

நீண்ட
மௌனங்கள் ....
உன்னிடம்
நான் பெற்றப்பொழுதெல்லாம்
காதல் மட்டுமே

நம்முடன்
அதிகரித்துக் கொண்டிருந்தது....

ஆனால்
இப்பொழுது இருக்கும் மௌனம் ......

என்னிடம் மட்டும்
நம்
காதல் நினைவுகளோடு.....

அன்புடன்
மேலூர் ராஜா....

அக்கினி வெயிலின் தாக்கம்

உனது வருகையால்
எனது,
நிழல் கூட
என்னை விட்டு மறைந்து விடுகின்றது ....

மண்
குளிர வேண்டிய
வேளையில் ...

உனது
வருகையால்..
நான் குளித்துக் கொண்டிருக்கின்றேன்,
வியர்வையின் மூலம் ....

போதும்
உன் தண்டனை
இயற்கையை அழித்தமைக்கு
நீ
பார்க்கும் கோரப்பார்வை....

ஆறு, குளம்
வறண்ட நிலைமை...
இப்போது
என்னுள்ளும் எழுகின்றதே....

மறைந்து விடு
கதிரவனே ....
எங்கள்
வளம் செழிக்க
மழை மேகத்தினை
அனுப்பிவிட்டு .....

அக்கினி வெயிலின் தாக்கத்தால்..

அன்புடன்
மேலூர் ராஜா..