Saturday, 31 October 2015

கண்ணாமூச்சு காட்டிவந்த பருவமழை

கண்ணாமூச்சு காட்டி வந்த வடகிழக்கு பருவ மழை துவங்கிவிட்டது.
நேற்று அதிகாலை முதலே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
கோடை மழையானது மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே பெய்யும்.
தற்போது உருவாகும் மேகங்கள் பருவ மழை காலத்தில் உருவாகும் மேகங்களாகும்.
தற்போதைய வானிலை கணிப்பின்படி வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டது.
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. எனவே தொடர் மழையை எதிர்பார்க்கலாம்.
வட கிழக்கு பருவ மழை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சராசரி மற்றும் சராசரிக்கு கூடுதலாக பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த வருடம் பருவ மழை எவ்வாறு இருக்கும் என்பதை, வருண பகவான் தான் முடிவு செய்ய வேண்டும் ,...
விவசாய பகுதியான மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை கூடிய மேககூட்டம் சிறு தூரலுடன் கண்ணாமூச்சு காட்டி ஏமாற்றி சென்றுவிட்டது . இன்றையபொழுதோ சொல்லிக்கொள்ளும் அளவில் மழை பெய்துள்ளது. ம் காத்திருப்போம் இந்த வருடமாவது குடிநீர் தேவைக்கும் , விவசாயத்திற்கும் போதுமான தண்ணீர் மழை மூலமாக கிடைக்குமா என்று ...!?

மேலூர் செய்திகளுக்காக
SM Raja
மக்கள்குரல் நிருபர்
9442822011 - 9500848973

Thursday, 21 May 2015

அன்னை பராசக்தி சில கோயில்களில் வித்தியாசமான திருக்கோலத்தில் அருள் புரிகின்றாள் அவற்றுள் சில ....

அன்னை பராசக்தி சில தலங்களில் வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அதில் சில....

அம்மனுக்கு மூல விக்ரகம் இல்லாமல் உற்சவ விக்ரமே மூலவராக வழிபடப் பெறும் தலம், காரைக்குடி, கொப்புடையம்மன் கோயில்.

வடக்கு நோக்கி சிவனை பூஜை
செய்யும் அம்பிகை சன்னதி உள்ள தலம். தக்கோலம், அசாம் மாநிலம் கௌஹாத்திக்கு அருகில் உள்ள காமாக்யாதேவி கோயிலில் தேவியின் யோனிச்சின்னம் மட்டுமே உள்ளது.

கிடந்த கோல துர்க்கை சன்னதி உள்ள தலம், திருநெல்வேலி கங்கை கொண்டான் அருகில் உள்ள பராஞ்சேரி. இங்கே பள்ளிகொண்ட துர்க்கை தரிசனம் தருகிறாள்.

துர்க்கையம்மனுக்கென்று தனிக்
கோயில். மயிலாடுதுறையை
அடுத்துள்ள தருமபுரத்தில் உள்ளது.

அம்பாள் வில் வடிவில் சிவனை
வழிபடும் உற்சவமூர்த்தம். திருமால் பேறில் உள்ளது.

பிரம்மனுக்கு ஞானம் அருளும் பிரம வித்யாம்பிகை உள்ள தலம்-
திருவெண்காடு,

சுவாமி, அம்மன் சன்னதிகள் எதிர்
எதிராக அமைந்துள்ள தலங்கள். திருவானைக்கா, திருஆமாத்தூர்,
அறையணி நல்லூர் .

திருநாகேஸ்வரத்தில் உள்ள அம்பிகை திருமகளும், கலைமகளும் பணி செய்யும் அம்பிகையாகக் காட்சி தருகின்றனர்.

கொல்லூரில் மூகாம்பிகையே,
அதிகாலை மூன்றரை மணி முதல் 7 மணி வரை சோட்டானிக்கரை பகவதியாகக் காட்சி தந்தருளுவதாக ஐதிகம்.

அமர்ந்த நிலையில் எட்டுத்
திருக்கரங்களுடன் அமைந்த துர்க்கை அம்மனை காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலில் தரிசிக்கலாம்.

குழந்தையுடன் அம்பிகை காட்சி தரும் தலங்கள்:
இசக்கியம்மன்-நெல்லை மாவட்டம், சிதம்பரபுரம் கிராமம்.
பிள்ளை இடுக்கி அம்மன் நாகைமாவட்டம், திருவெண்காடு.

திருவண்ணாமலை மாவட்டம்
தேவிகாபுரத்தில் அம்மன்
பெரியநாயகி சன்னதி கீழேயும், சிவன் கனககிரீஸ்வரர் சன்னதி மலைக்கு மேலேயும் அமைந்துள்ளது.

பொள்ளாச்சி மாசாணியம்மன்
கோயிலில் அம்மன் சயன கோலத்தில் உள்ளாள்.

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நீலோத்பலாம்பாள் முருகனின் தலையை தடவிய கோலத்தில உள்ளாள்.

அன்னை கமலாம்பாள் கால் மேல் கால் போட்டு ராணி கோலத்தில்
அருள்பாலிக்கிறாள்.

திருவெண்காடு புதன் ஸ்தலத்தில்.
அம்மன் பெரியநாயகி சம்பந்தரை
இடுப்பில் தூக்கிய நிலையில்
பிரகாரத்தில் உள்ளாள்.

காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி
கோயிலில் லிங்கத்தின் பாணத்தில் அம்மனின் வடிவம் உள்ளது. இதை அர்த்தநாரீஸ்வர லிங்கம் என்கின்றனர்.

தஞ்சாவூர் திருச்சத்திமுற்றம்
சிவக்கொழுந்தீசர் கோயிலில். அம்மன் சிவனை கட்டித்தழுவிய கோலத்தில் உள்ளார்.

பொதுவாக வலது கையில் அருள்பாலிக்கும் அம்மன் கேரளா
சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோயிலில் இடதுகையில் அருள்பாலிக்கிறாள்.

நாகப்பட்டினம் மாவட்டம்
திருமணஞ்சேரியில் உள்ள
கோகிலாம்பாள் . இடது கையை ஊன்றி, வலது காலை குத்தவைத்தபடி அமர்ந்த கோலத்தில் உள்ளாள்.

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் உள்ள காளி. வலது காலை குத்துக்காலிட்டு இடது காலை தொங்கவிட்டு வலது கையில் சூலம் ஏந்திய கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

சிதம்பரம் தில்லை காளி கோயிலில் அம்மன் . நான்கு முகத்துடன் பிரம்மசாமுண்டீஸ்வரியாக அருள்பாலிக்கிறாள்.

கும்பகோணம் அய்யாவாடி
பிரத்தியங்கிரா கோயிலில் அம்மன் . சிம்ம முகத்துடன் அருள்பாலிக்கிறாள்.

Monday, 18 May 2015

குலசேகர பட்டிணம் முத்தாரம்மன்

குலசேகர பட்டிணம் முத்தாரம்மன் திருவுருவ சிலை உருவான அற்புத நிகழ்வு ....

குலசேகரப்பட்டினத்தில் சுயம்பு
வடிவிலேயே முத்தாரம்மனை பக்தர்கள் ஆரம்ப காலங்களில் வழிபட்டு வந்தனர்.
அப்போது அன்னையின்
திருமேனியினைக் கண்குளிரக் கண்டு, அவளைத் தரிசனம் செய்ய வேண்டும் என்று அவ்வூர் பக்தர்களுக்கு ஆவல் ஏற்பட்டது.

அம்பாளிடம் இதற்காக
மனமுருகி அவர்கள் வேண்டினர்.
அப்போது ஒருநாள், கோவில் அர்ச்சகரின் கனவில் அம்மன் தோன்றினாள்.
“எனது திருவுருவைக் காண நீங்கள் அனைவரும் ஆவலாக இருப்பது தெரிகிறது. கன்னியாக்குமரி அருகே
மைலாடி என்றொரு சிற்றூர் உள்ளது. அங்கு செல் அனைத்தும்
நிறைவேறும் என்று கூறினாள்.

மைலாடி பகுதியில் அதிக அளவில் பாறைகள் உண்டு. இதனை வெட்டி எடுத்து கலைநுணுக்கத்துடன் கடவுள்
சிலைகளை நிறைய பேர் செய்து
வருகின்றனர்.

இப்படி பக்தர்களின் விருப்பத்திற்கேற்ப, கற்களில் அற்புதமாக சிலை வடிவமைத்துக் கொடுக்கும் ஆற்றலை சுப்பையா ஆசாரி என்பவர் பெற்றிருந்தார். அவரது கனவிலும் குலசை முத்தாரம்மன் தோன்றினாள்.
குலசேகரன் பட்டினத்தில் தான்
சுயம்புவாக விளங்கி இருப்பது பற்றி விரிவாகக் கூறினாள்.
அதுமட்டுமல்லாமல், தன்  உருவத்தைக் காண அங்குள்ள பக்தர்கள் அனைவரும் ஆவலாக இருப்பதையும் ஆசாரிக்குத்
தெரியப்படுத்தினாள்.

பின்னர், தனது மற்றும் சுவாமியின் திருமேனியுடன் ஆசாரிக்குக் காட்சி அளித்த அன்னை, தங்களை நன்கு உற்று
நோக்குமாறும், தென் திசையில் உள்ள ஆண் பெண் பாறையில் ஒரே கல்லில், ஒரே பீடத்தில் தங்கள் திருவுருவச் சிலையை வடித்துக் கொடுக்குமாறும் உத்தரவிட்டாள். தங்கள் சிலைகளைச் செய்து, தாங்கள்
சுயம்புவாக முளைத்துள்ள
இடத்திற்கு அருகாமையில் அந்தக்
கற்சிலையை நிறுவ வேண்டும்
என்றும் அந்தக் கனவில் ஆசாரிக்குக் கட்டளையிட்டு முத்தாரம்மன் மறைந்தாள்.

இந்தக் கனவு கலைந்ததும்
திடுக்கிட்டார் ஆசாரி. கனவில்
முத்தாரம்மன் தனக்கு ஆணை
பிறப்பித்ததை உணர்ந்தார். குலசேகரப்பட்டினம் எங்கிருக்கிறது என்பது பற்றி பலரிடமும் விசாரித்து
அறிந்து கொண்டார். அதன்பிறகு தன் மனதில் திடமாகப் பதிந்திருந்த அம்பாள் மற்றும் சுவாமியின் திருமேனியை
அப்படியே கற்களில் சிலையாக
வடித்தார்.

முத்தாரம்மன் கனவில் கூறியபடி குலசை அர்ச்சகர்,அவ்வூரைச் சேர்ந்தச் சிலருடன் மைலாடி சென்றார்.
சுப்பையா ஆசாரி பற்றி விசாரித்து
அறிந்து அவரைச் சந்தித்தார்கள்.
சுப்பையா ஆசாரி ஏற்கனவே
ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் சிலையை செய்து வைத்திருந்தார்.
அந்தப் புனிதமான சிலையை உணர்ச்சிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டு அவர்கள் குலசேகரன்பட்டினம் திரும்பினர்.
முத்தாரம்மனின் விருப்பப்படியே அந்தச் சிலை, சுயம்புவாக முளைத்துள்ள அம்பாளின் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த அன்னைதான் குலசேகரன்
பட்டினத்தில் இன்றும் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறாள். முத்தாரம்மன்
அருகே ஒரே பீடத்தில் சுவாமி
ஞானமூர்த்தி வீற்றிருப்பது இந்த
ஆலயத்தின் முக்கியச் சிறப்பாகும்.

இதுபோல் அம்பாளும், சிவனும்
ஒருசேர வீற்றிருந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே.

இத்தலத்தில் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், சுவாமி, அம்பாள் ஆகிய இருவருமே
வடக்கு நோக்கி வீற்றிருக்கிறார்கள்.
தமிழ் நாட்டில் வேறு எந்த தலத்திலும் இத்தகைய காட்சியை காண இயலாது. மேலும் அம்பாளுக்கும், சிவனுக்கும்
ஒரே நேரத்தில் பூஜை
நடைபெறுகிறது என்பதும் முக்கிய விஷயமாகும். இந்த கோவிலின் தலமரமாக வேம்பு விளங்குகிறது *

Tuesday, 14 April 2015

சிவன் திருக் கோயில்கள் ,...


இவை அனைத்தும் புராதன பெயரில்

சோழநாடு காவிரி
வடகரை
கோயில்
----------------------------------------
(தில்லை /
சிதம்பரம்)

திருவேட்களம்

திருநெல்வாயில்

திருக்கழிப்பாலை

திருநல்லூர்ப் பெருமணம்

திருமயேந்திரப்பள்ளி

தென்
திருமுல்லைவாயில்

திருக்கலிக்காமூர்

திருச்சாய்க்காடு

திருப்பல்லவனீச்சுரம்

திருவெண்காடு

கீழைத்
திருக்காட்டுப்பள்ளி

திருக்குருகாவூர்

சீர்காழி

திருக்கோலக்கா

திருப்புள்ளிருக்கு
வேளூர்

திருக்கண்ணார் கோயில்

திருக்கடைமுடி

திருநின்றியூர்

திருப்புங்கூர்

திருநீடூர்

அன்னியூர்

திருவேள்விக்குடி

எதிர்கொள்பாடி

திருமணஞ்சேரி

திருக்குறுக்கை

கருப்பறியலூர்

திருக்குரக்குக்கா

திருவாழ்கொளிப்
புத்தூர்

பழமண்ணிப் படிக்கரை

ஓமாம்புலியூர்

கானாட்டுமுள்ளூர்

திருநாரையூர்

திருக்கடம்பூர்

திருப்பந்தணைநல்லூர்

கஞ்சனூர்

திருக்கோடிகா

திருமங்கலக்குடி

திருப்பனந்தாள்

திருஆப்பாடி

சேய்ஞலூர்

திருந்துதேவன்குடி

திருவியலூர்

திருக்கொட்டையூர்

திருஇன்னம்பர்

திருப்புறம்பயம்

திருவிசயமங்கை

திருவைகாவூர்

வடகுரங்காடுதுறை

திருப்பழனம்

திருவையாறு

திருநெய்த்தானம்

திருப்பெரும்புலியூர்

திருமழபாடி

திருப்பழுவூர்

திருக்கானூர்

அன்பில் ஆலந்துறை

திருமாந்துறை

திருப்பாற்றுறை

திருஆனைக்கா

திருப்பைஞ்ஞீலி

திருப்பாச்சில்
ஆச்சிராமம்

திருஈங்கோய்மலை

சோழநாடு காவிரித்
தென்கரை
----------------------------------------*

திருவாட்போக்கி

கடம்பந்துறை

திருப்பராய்த்துறை

கற்குடி

திருமுக்கீச்சரம்

திருசிராப்பள்ளி

திருஎறும்பியூர்

திருநெடுங்களம்

மேலைத்
திருக்காட்டுப்பள்ளி

திருஆலம்பொழில்

திருப்பூந்துருத்தி

திருக்கண்டியூர்

திருச்சோற்றுத்துறை

திருவேதிகுடி

தென்குடித்திட்டை

திருப்புள்ளமங்கை

சக்கரப்பள்ளி

திருக்கருகாவூர்

திருப்பாலைத்துறை

திருநல்லூர்

ஆவூர்ப்பசுபதிச்சுரம்

திருச்சத்திமுற்றம்

திருப்பட்டீச்சரம்

பழையாறை வடதளி

திருவலஞ்சுழி

திருக்குடமூக்கு

குடந்தைக் கீழ்க்கோட்டம்

குடந்தைக்காரோணம்

திருநாகேச்சுரம்

திருஇடைமருதூர்

தென்குரங்காடுதுறை

திருநீலக்குடி

வைகல்மாடக்கோயில்

திருநல்லம்

திருக்கோழம்பம்

திருஆவடுதுறை

திருத்துருத்தி

திருஅழுந்தூர்

மயிலாடுதுறை

திருவிளநகர்

திருப்பறியலூர்

திருச்செம்பொன் பள்ளி

திருநனிப்பள்ளி

திருவலம்புரம்

திருத்தலைச்சங்காடு

திருஆக்கூர்

திருக்கடவூர் வீரட்டம்

திருக்கடவூர் மயானம்

திருவேட்டக்குடி

திருத்தெளிச்சேரி

திருத்தருமபுரம்

திருநள்ளாறு

திருக்கோட்டாறு

திருஅம்பர்

திருஅம்பர் மாகாளம்

திருமீயச்சூர்

இளங்கோயில்

திருத்திலதைப்பதி

திருப்பாம்புரம்

திருச்சிறுகுடி

திருவீழிமிழலை

திருவன்னியூர்

கருவிலிக் கொட்டிட்டை

பேணுபெருந்துறை

திருநறையூர்ச்
சித்தீச்சரம்

திருஅரிசிற்கரைப்
புத்தூர்

திருச்சிவபுரம்

திருக்கலயநல்லூர்

திருக்கருக்குடி

திருவாஞ்சியம்

நன்னிலம்

கொண்டீச்சரம்

திருப்பனையூர்

திருவிற்குடி வீரட்டம்

திருப்புகலூர்

திருப்புகலூர்
வர்த்தமானீச்சரம்

இராமனதீச்சரம்

திருப்பயற்றூர்

திருசெங்காட்டங்குடி

திருமருகல்

திருச்சாத்தமங்கை

திருநாகைக் காரோணம்

சிக்கல்

திருக்கீழ்வேளூர்

திருத்தேவூர்

திருப்பள்ளியின்
முக்கூடல்

திருஆரூர்

திருஆரூர் அரநெறி

திருஆரூர்ப் பரவையுண்
மண்டளி

திருவிளமர்

கரவீரம்

பெருவேளூர்

தலையாலங்காடு

திருக்குடவாயில்

திருச்சேறை

திருநாலூர் மயானம்

கடுவாய்க்கரைப் புத்தூர்

திருஇரும்பூளை

திருஅரதைப்
பெரும்பாழி

திருஅவளிவணல்லூர்

பரிதிநியமம்

திருவெண்ணியூர்

திருப்பூவனூர்

பாதாளேச்சுரம்

திருக்களர்

திருச்சிற்றேமம்

திருவுசாத்தானம்

இடும்பாவனம்

திருக்கடிக்குளம்

திருத்தண்டலை நீள்நெறி

திருக்கோட்டூர்

திருவெண்டுறை

கொள்ளம்புதூர்

திருப்பேரெயில்

திருக்கொள்ளிக்காடு

திருதெங்கூர்

திருநெல்லிக்கா

திருநாட்டியத்தான்குடி

திருக்காறாயில்

கன்றாப்பூர்

திருவலிவலம்

திருக்கைச்சினம்

திருக்கோளிலி

திருவாய்மூர்

திருமறைக்காடு

திருஅகத்தியான்பள்ளி

திருக்கோடி

ஈழ நாடு
----------------------------------------
திருக்கோணமலை

திருக்கேதீச்சரம்

பாண்டிய நாடு
----------------------------------------

திருஆலவாய்

திருஆப்பனூர்

திருப்பரங்குன்றம்

திருஏடகம்

திருக்கொடுங்குன்றம்

திருப்புத்தூர்

திருப்புனவாயில்

இராமேச்சுரம்

திருஆடானை

திருக்கானப்பேர்

திருப்பூவனம்

திருச்சுழியல்

திருக்குற்றாலம்

திருக்குறும்பலா

திருநெல்வேலி

மலை நாடு
----------------------------------------
திருஅஞ்சைக்களம்

கொங்கு நாடு
----------------------------------------
திருப்புக்கொளியூர்
(அவிநாசி)

திருமுருகன்பூண்டி

திருநணா(பவானி)

திருச்செங்குன்றூர்

திருவெஞ்சமாக்கூடல்

திருப்பாண்டிக்

கொடுமுடி

திருக்கருவூரானிலை
(கரூர்)

நடு நாடு
----------------------------------------
திருநெல்வாயில்

அரத்துறை

தூங்கானைமாடம்

திருக்கூடலையாற்றூர்

எருக்கத்தம்புலியூர்

திருத்தினைநகர்

திருச்சோபுரம்

திருஅதிகை வீரட்டானம்

திருநாவலூர்

திருமுதுகுன்றம்

திருநெல்வெண்ணெய்

திருக்கோவலூர் வீரட்டம்

அறையணிநல்லூர்

திருஇடையாறு

திருவெண்ணெய் நல்லூர்

திருத்துறையூர்

திருவடுகூர்

திருமாணிக்குழி

திருப்பாதிரிப்புலியூர்

திருமுண்டீச்சரம்

திருப்புறவார்

பனங்காட்டூர்

திருஆமாத்தூர்

திருஅண்ணாமலை

தொண்டை நாடு
----------------------------------------
திருக்கச்சி ஏகம்பம்

திருக்கச்சி மேற்றளி

ஓணகாந்தன்தளி

திருக்கச்சி

அனேகதங்காவதம்

திருக்கச்சி

நெறிக்காரைக்காடு

குரங்கணில்முட்டம்

திருமாகறல்

திருவோத்தூர்

திருவன்பார்த்தான்

பனங்காட்டூர்

திருவல்லம்

திருமாற்பேறு

திருவூறல்

இலம்பையங்கோட்டூர்

திருவிற்கோலம்

திருஆலங்காடு

திருப்பாசூர்

திருவெண்பாக்கம்

திருக்கள்ளில்

திருக்காளத்தி

திருவொற்றியூர்

திருவலிதாயம்

வட
திருமுல்லைவாயில்

திருவேற்காடு

திருமயிலாப்பூர்

திருவான்மியூர்

திருக்கச்சூர்

திருஇடைச்சுரம்

திருக்கழுக்குன்றம்

அச்சிறுபாக்கம்

திருவக்கரை

திருஅரசிலி

இரும்பைமாகாளம்

துளுவ நாடு
----------------------------------------
திருக்கோகர்ணம்

வட நாடு
----------------------------------------
திருப்பருப்பதம்

இந்திர நீலப்பருப்பதம்

திருஅநேகதங்காவதம்

திருக்கேதாரம்

திருநொடித்தான்மலை

புதிய தலம் (காவேரி
தென்கரை)
----------------------------------------
திருவிடைவாய்

ஓம் நமசிவாயா

அண்ணாமலை யாரைப் பற்றிய நூலிலும் சித்திரையே முதல் மாதம் ,.

"" அண்ணாமலை சதகத்தின் உண்மை,  சித்திரையே முதல் தொடக்கம் ""

19ம் நூற்றாண்டில் மாம்பாக்கம் உபாத்தியாயர் எனும் திருச்சிற்றம்பல நாவலரால் இயற்றப்பட்ட நூல் * அண்ணாமலை சதகம் * என்பது . இது அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்யும் நாள் , திருவண்ணாமலையில் உள்ள தீர்த்தத் தொகைகள் , திருக்கோயிலின் தலப்பெருமை,திருமுனைப் பாடி . நாட்டுச் செய்தி முதலியானவற்றை பற்றித் தெரிவிக்கின்றது . மேலும் இந்நூலில் விபூதி தரிக்கும் முறை , பிரதோஷ தரிசனம் , ருத்ராசம் அணியும் விதி , சிவபூசைக்கு உரிய பூக்கள் , சைவ மடங்களின் வகை. முதலியான செய்திகளும் உள்ளது . இந்நூலில் அண்ணாமலையாருக்குப் பௌர்ணமி தோறும் செய்யும் அபிஷேக வகை பற்றிய பாடலொன்று உள்ளது .

அந்தப் பாடல் இதோ ...

வருடாதி சித்திரைத் திங்கள்பூ ரணைநாண்
   மருக்கொழுந் தபிடேகமாம்,
வைகாசி சந்தனம தானியில் பலாப்பழமு
    மாங்கனி கதலிக்கனி,
கருதுஆடி சர்க்கரை நாலாவணியி லதிரசங்
     காணும் புரட்டாசியிற்,
காய்ச்சிய திரட்டுப்பா லைப்பசிக் கன்னமாங்
     கார்த்திகைத் தீபார்ச்சனை,
திருமார் கழிக்குநெய் தைத்தேன் குடங்கிர்தஞ்
     சேர்ந்தகம் பள மீன்மதித்,
தீந்தயிர் பரமனுக் காட்டல்விதி பூரணைத்
      திதிதோறு மாசபூசை,
யரிதா யறிந்துனக் கபிஷேக மதுபுரிந்
     தருள்பெறு வசந்தராயர்,
அண்ணாவி னிற்றுசெ யுண்ணாமுலைக்குரிய
     அண்ணா மலைத்தேவனே!

இப்பாடலில் நாவலரவர் , சித்திரைத் தொடங்கி மீன மதி ஈறாக வரிசையாக மாதங்களைக் குறிப்பிட்டுள்ளார் . சித்ரா பௌர்ணமி தொடங்கி ஒவ்வொரு பௌர்ணமியிலும் எந்தெந்தப் பொருட்களால் அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்தல் வேண்டும் என்பதைத் தெரிவித்துள்ளார் . சித்திரையில் மருக்கொழுந்தால் அபிஷேகித்தல் சிறப்பு என்கிறார் . இவருக்கு முன்னால் பதினாறம் நூற்றாண்டில் வாழ்ந்த கமலை ஞானப்பிரகாசர் என்பவர் " புட்பவிதி " எனும் நூலில் சித்திரைத் திங்களை முதலாவதாகக் கொள்ளவேண்டும் ( பாடல் 21 மற்றும் 22 ) என்றே அத்தியாயம் இயற்றியுள்ளார் .

Monday, 2 February 2015

முத்தம்

இனம் புரியாத
மகிழ்ச்சியாய் என்னில்
பக்கத்தில் உள்ள
குழந்தைக்கு நீ தந்த
முத்தத்தால்
எனக்காகவே என்று...

தவிப்பு

ஏறுகொண்டு போறவரே
என்னை ஏழெடுத்து பார்ப்பிரோ..

காய்ந்த வயலுக்கு போறவரே
என்நெஞ்சயும்
களவான்டு போறீரே..

ஒத்தபுள்ளயா தனிச்சிருக்கேன்
என்னை
தவிக்கவிட்டு போறீரே...

காய்ந்த வயலைப் பார்ப்பவரே
இந்த கன்னியின்
மனசையும் பார்ப்பீரே ,,,