உன் வாசல்தேடி வரும் தென்றலில் என் சுவாசம்.... உன் பாதம்படும் இடம் அனைத்தும் என் நினைவுகள் .... உன் விரல் தீண்டும் அனைத்திலும் என் புன்னகை.. உன் நிழல் படும் இடங்கள் என்றும் என் நிஜங்கள்.... என்னில் நீ இருப்பதால் .....
நீ அனுப்பிய பரிசு வெற்றுப் பெட்டி என்றிருந்தேன்.... என் இதயத்தில் நீ இருந்து சுவாசிப்பது போல் உன் சுவாசத்தையே அடைத்து கொடுத்தாய்.. எனக்காக என்று
என்னருகில் நீ இல்லாத போதும் ... என்னுள்ளே எப்பொழுதும் அலங்கரிக்கும் உன் புகைப்படம் ..