ஆடிடும் ருத்ராயா ,
நின்பாதமலர் சரணகதி
எனை ஆட்கொண்டுவிடு
ஆடலரசா ,,..
பித்ததினால்
சித்தம் மறந்தேனே
எங்கும் நிறைந்திருக்கும்
பிறைச்சூடிய பித்தா,
எனை ஆட்கொண்டுவிடு ,,...
இச்சைகளின்
ஆட்கொள்ளுதலால்
எனை ஆட்கொள்ளும்
சித்தா
உனை
மறந்த எனை சித்தம்
கொண்டு ஆட்கொண்டுவிடு ,.....
குறையில்லா
குருதியின் ஓட்டத்ததால்
உலகையாலும் குருதேவா
உனை மறந்த
எனை
குருதியுடன் நின்
கலந்திட்று
எனை ஆட்கொண்டுவிடு .....
எனது
சித்தத்திலும்
பித்தத்திலும் எனை
ஆட்கொண்டு
உன் திருவடியில்
சரணகதி அளித்துவிடு
ஆட்கொள்ளும்
வணக்கம்
ReplyDeleteஅருமையான பக்கதி பாடல்.. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை நண்பா...
ReplyDelete