Friday 6 September 2013

பிறந்தநாள் வாழ்த்து

அன்பு உறவு
திரு ."தென்றல் சசிகலா" அவர்களுக்கு  பிறந்தநாள் வாழ்த்து.... ,
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒருதிறமைகள் இருக்கும் அதை வெளிக்கொண்டு வர ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொருவர் தேவைப்படுகின்றார் .  அவர்கள் மூலமாக நம் திறமைகள் மேலும் வலுபெறுகிறது..
அந்தவகையில் , திரு சசிகலா அவரின் கவிதைகளை பார்த்து அவ்வப்போது பதில் தொடர் கவிதைகளாக பதில் எழுதுவேன். (அதிக பட்சமாக இரண்டு வரிகள் மட்டும் தான்)  என் கவிதைகளை பார்த்து அதில் உள்ள தவறுகளையும், எப்படி சிறப்பாக எழுதுவது என்றும்.  என்னை இன்னும் திறமையாகவும், சிறப்பாகவும், எழுத முழுஉதவி செய்தார்கள். செய்தார்கள் என்பதைவிட  என்னை உருவாக்கினார்கள்
என்று தான் கூறவேண்டும்..
மேலும் எனது கவிதைகளை  தொகுப்பாக உருவாக்க வலைத்தளம்  தொடங்கி உதவி புரிந்தார்கள்... எப்பொழுதும் அவர்களின் ஆசி என்னுடனே  இருக்கவேண்டும் என்பதற்காகவே தான் எனது வலைத்தளத்திற்கு அவர்களின் பெயரை தொடர்தே "தென்றலின்வாசம்" என்ற பெயரைக்கூட தேர்ந்தெடுத்தேன்...

தென்றலாக
வருகைப்புரிந்து..
வாசம்மெனும் பாசத்தை அளவில்லாமல் அள்ளித்தரும் எங்கள் வசந்த பூ மலரே.....
உன்  பாதச்சுவடு
துணையோடு
என் பயணம்....
நட்பு எனும் இமயத்தை நோக்கி....

கனவு

என் விழிகள்
மூடியபின்பே வருகிறாய்  உனக்காக நான்என்று...
கனவில்..