Saturday 31 October 2015

கண்ணாமூச்சு காட்டிவந்த பருவமழை

கண்ணாமூச்சு காட்டி வந்த வடகிழக்கு பருவ மழை துவங்கிவிட்டது.
நேற்று அதிகாலை முதலே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
கோடை மழையானது மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே பெய்யும்.
தற்போது உருவாகும் மேகங்கள் பருவ மழை காலத்தில் உருவாகும் மேகங்களாகும்.
தற்போதைய வானிலை கணிப்பின்படி வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டது.
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. எனவே தொடர் மழையை எதிர்பார்க்கலாம்.
வட கிழக்கு பருவ மழை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சராசரி மற்றும் சராசரிக்கு கூடுதலாக பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த வருடம் பருவ மழை எவ்வாறு இருக்கும் என்பதை, வருண பகவான் தான் முடிவு செய்ய வேண்டும் ,...
விவசாய பகுதியான மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை கூடிய மேககூட்டம் சிறு தூரலுடன் கண்ணாமூச்சு காட்டி ஏமாற்றி சென்றுவிட்டது . இன்றையபொழுதோ சொல்லிக்கொள்ளும் அளவில் மழை பெய்துள்ளது. ம் காத்திருப்போம் இந்த வருடமாவது குடிநீர் தேவைக்கும் , விவசாயத்திற்கும் போதுமான தண்ணீர் மழை மூலமாக கிடைக்குமா என்று ...!?

மேலூர் செய்திகளுக்காக
SM Raja
மக்கள்குரல் நிருபர்
9442822011 - 9500848973