Sunday 31 January 2016

சித்தர்களின் எந்திரம் ......

திரு மூலர் அருளிய திருஅம்பலச் சக்கரம்...

சித்தர்களின் எந்திரம் ...

கருவூராரின் ஐங்கோண யந்திரம்

சித்தர்களின் மகா எந்திரம்

திருமூலர் சொல்லும் தம்பனச் சக்கரம் ,..

அன்போடு தொடருவோம் அறிந்துகொள்ள .,,. ( பகுதி 13 )

ஓம் என்ற ஒலியிலிருந்துதான் இந்த உலகம் தோன்றியது என்பார் திருமூலர்.

"ஓங்காரத் துள்ளே உதித்த ஐம் பூதங்கள்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்காரத் தீதத்து உயிர் மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ ரூபமே!"

பிரணவத்துள் தோன்றியதே இந்த உலகத்தின் பஞ்ச பூதங்கள், அவற்றில் விளைந்த மாற்றங்களில் அசையும் உயிர்களும், அசையா உயிர்களும் உண்டாயின.

இந்த உலகம் ஒலியின் வடிவம் என்பதை ஞானம் கைவரப் பெற்றவர்கள் அறிந்திருந்தனர். பல சப்தங்களின் பிரதிபலிப்பே உலகம் என்பார்கள் அவார்கள்.

ஒரு பேரொளி இந்த பிரபஞ்சத்தையே நிரப்பி இருக்கின்றது. உலகம் முழுதும் ஒளி, உலகமெங்கும் ஒலி. ஆனால் சில ஒளி களைத்தான் நம் கண்கள் பார்க்கின்றன. சில ஒலிகளைத்தான் நம் காதுகள் கேட்கின்றன.

அனால் ஒலிகளுக்கும் உருவம் உண்டு அதையும் பார்க்கலாம் என்கிறார்கள் சித்தர்கள். ஒலியைக் கேட்கமுடியும், அது எப்படி பார்ப்பது என்று யோசிக்கிறீர்களா?

மந்திரங்கள் ஒலிவடிவானவை. அந்த மந்திரங்களை கண்ணால் கண்ட சித்தர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். ஆக, கண்ணால் ஒலியைக் காண்பது சாத்தியம் என்கிறார்கள் அவர்கள்.

நம்முடைய விருப்பங்களைத் தெரிவிக்கவும், நம்முடைய வேலைகளைக் குறித்தும் நாம் பேசுகின்றோம். இந்தப் பேச்சொலி நாம் வாய் திறந்து பேசும் முன் எங்கிருந்தது? மனதில் எண்ணமாக இருந்தது. அதற்க்கு முன் எப்படி இருந்தது?

அது எண்ணங்களும், நினைவுகளுமாக முதலில் சூட்சும சப்தமாக இருந்தது. அதன் பிறகே வாய் மூலம் வெளிப்பட்டது. இந்த சப்தங்களை நான்கு வகையாகப்பிரிப்பர். அவை,

1, வைகரி - செவியோசை.

2, மத்திமை - கருத்தோசை.

3, பைசந்தி - நினைவோசை.

4, பரை - நுண்ணோசை, என்பவை ஆகும்.

நம்முடைய ஒவ்வொரு எண்ணமும் சொல்லாக ஒலி வடிவம் பெறுவதற்க்கு முன் சூட்சும ஒலியாய் இருந்தவையே.அந்த சூட்சும ஒலியையே ஓம் என்கிறார்கள் சித்தர்கள்.

ஆக, ஓங்காரம் மூல சப்தம் எல்லாமந்திரங்களுக்கும், ஒலிகளுக்கும் அதுவே ஆதாரம் என்கிறார்கள் சித்தர்கள்.

இது பற்றிய மேலும் விபரமாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்..

அன்போடு தொடருவோம்
அறிந்துகொள்ள .... ( பகுதி  13 )

அன்போடு தொடருவோம் ... அறிந்துகொள்ள ,.. பகுதி 12

சித்தர்களின் யந்திரங்கள்...
ஒலிக்கும் உருவம் உண்டென உணர்ந்த சித்தர்கள், அந்த ஒலியின் மூலமான எழுத்துக்களின் அதிர்வையும், சக்தியையும் தங்களின் தேவைகளுக்கு பயன் படுத்தினர். ஒவ்வொரு எழுத்துக்கும் உண்டான அதிர்வை அல்லது சக்தியினை மற்ற எழுத்துக்களோடு சேர்க்கும் போது சக்தி உருவாக்கம் நடக்கிறது. இதை மந்திரம் என்றனர்.

எழுத்துக்கள் மந்திரங்களாக உருவாக்கும் போது அவை உயிர் பெற்று வருகின்றன. அவை தனது சக்தியால் சுற்றுப்புற சூழலிலும் மனிதர்களிலும் மாற்றங்களை உண்டாக்குகின்றன. ஓம், ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம் போன்ற மந்திரங்கள் முழு மனதுடன் உச்சரிக்கும் போது உடலில் உள்ள அவ்வளவு நரம்புகளிலும் ஒரு அதிர்வு உண்டாவதை அவதானிக்கலாம். இந்த மந்திரங்களை நாங்கள் உச்சரிக்காவிட்டாலும் அவற்றை எழுதிய ஓலை அல்லது தகடை அருகில் வைத்திருப்பதன் மூலம் ஒரு பாதுகாப்பும் நன்மையையும் உண்டாகும்.

எழுத்துக்களைப் போலவே எண்களுக்கும் சக்தி உள்ளது என்றும், எழுத்துக்களையும் எண்களையும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் சக்கரமாக அமைத்து அதற்க்கு உண்டான குறிப்பிட்ட மந்திரத்தை குறிப்பிட்ட அளவில் ஜெபித்தால் அவை தொழிற்பட தொடங்கும் என்பதையும் சித்தர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

நவக்கிரகங்களின் கிரக சாரங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவும், தங்கள் இஷ்ட தெய்வங்களின் அருளை பெற்றுக் கொள்ளவும் , பில்லி சூனியம் , ஏவல் போன்றவற்றிலிருந்து தம்மைச் சூழ்ந்து உள்ளவர்களைக் காக்கவும் சித்தர்கள் எண்களையும் எழுத்துக்களையும் மாறி மாறி இட்டு சக்கரங்களை உருவாக்கினார்கள்.

அவற்றின் மூலம் தாங்கள் அடைந்த பலனையும் சக்கரங்கள் தயாரிக்கும் முறையையும் என்ன சக்கரத்திற்கு என்ன மந்திரம் எத்தனை தடவை சொல்லவேண்டு என்பதையும் அது என்ன என்ன வேலைகளைச் செய்யும் என்பதையும் தங்களின் பாடல்களில் தெளிவாகவே சொல்லிச் சென்றுள்ளனர்.

அவ்வாறு அருளப் பட்ட சில யந்திரங்களை எப்படித் தயாரிப்பது என்பது பற்றியும் இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

அன்போடு தொடருவோம் .,.
       அறிந்துகொள்ள .....      பகுதி - 12
          

அருட் பெரு ஜோதி வள்ளலார் - மேலூர் ராஜா

வடலூர் சத்தியஞான சபையில் ஏழுதிரை நீக்கி ஜோதி தரிசனம்


வடலூர் சத்தியஞான சபையில் ஏழுதிரை நீக்கி ஜோதி தரிசனம்

கருப்புத்திரை இறையை மறைக்கிறது

நீலத்திரை உயிராகிய ஆன்மாவை மறைக்கிறது

பச்சைத்திரை பரவெளியை மறைக்கிறது

சிவப்புத்திரை சிதாகாசவெளியை மறைக்கிறது

பொன்மைத்திரை பரம்பொருள் உள்ள வெளியை மறைக்கிறது

வெண்மைத்திரை மெய்ப்பதியை மறைக்கிறது

கலப்புத்திரை இந்திரிய கரண அனுபவங்களை மறைக்கிறது
இப்படி தத்துவங்கள் 36 அவற்றின் தாத்துவிகங்கள் 60 சேர்த்து 96 அனுபவநிலைகளை மறைக்கும் திரைகளை நீக்கி ஆன்மப்பிரகாசத்தை அகத்தில் காணும் அனுபவமே ஏழுதிரை நீக்கிக் காட்டப்படும் வடலூர் ஜோதி தரிசனம்

உலகிலேயே வடலூரில் மட்டுமே காட்டப்படும் அற்புத நிகழ்ச்சி
அதிகாலை ஆறுமணிக்குக் காட்டப்படும் இந்த ஜோதியைக் காண வானுலக தேவர்கள் மற்றும் சித்தர்கள் வடலூர் பெருவெளியில் சூட்சும நிலையில் நின்று காண வருவதாக வள்ளலார் அன்பர்கள் கருதுவர்

வியாபாரம் சிறக்க மகாலட்சுமி மந்திரம்

வியாபாரம், தொழில் விருத்தி தரும் ஸ்ரீ லக்ஷ்மி மந்திரம் !!

வட இந்திய வியாபாரிகள் பின்பற்றும் ஒரு ரகசிய முறையை இங்கு தருகிறேன் .

படித்துப் பயன்பெறுங்கள்.தொழில்,வியாபார ஸ்தாபனங்களில் தினமும் விளக்கேற்றி இம்மந்திரம் ஜெபித்து வர தொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்படும்.

மேலும்பணத்தைப் பெருக்கும் புத்திசாலித்தனம் உண்டாகும்.வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி அன்று பச்சைக்கற்பூரம்ஏலக்காய் கலந்து காய்ச்சிய பால்,வெற்றிலை,பாக்கு,பாயசம்,கற்கண்டு,பழங்கள் வைத்து வழிபட விரைவான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.விளக்கேற்றி "

ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மித் தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள் பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வறுமை கடன் அற்ற வளமான வாழ்வு தந்தருள வேண்டும்"

என்று வேண்டி தீபத்தை வணங்கித் தலை மற்றும் கண்களில் ஒற்றிக்கொள்ளவும்.தீபம் அணைந்ததும் தீபத்திரியில் உள்ள கருக்கை நெற்றியில் இட்டுக் கொள்ளவும்.இது உயர்வான பலன்களைத் தரும்.மற்ற நாட்களில் முடிந்ததை நைவேத்யம் செய்து வழிபட்டு வாருங்கள். அல்லது கல்கண்டு மட்டும் படைக்கலாம்.

மந்திரம் :-

ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமக

கோரக்கர் அருளிய சந்திரரேகை

நீண்ட தேடலுக்கு பின் குருவின் ஆசியால் என்னுடைய ஆன்மீக பயிலக ஸ்ரீ போகர் அறக்கட்டளை அண்ணன்  ஜீ மூலமாக கிடைக்கப் பெற்ற சித்தர் ஸ்ரீ கோரக்கர் அருளிய சந்திரரேகை....