Tuesday 14 April 2015

சிவன் திருக் கோயில்கள் ,...


இவை அனைத்தும் புராதன பெயரில்

சோழநாடு காவிரி
வடகரை
கோயில்
----------------------------------------
(தில்லை /
சிதம்பரம்)

திருவேட்களம்

திருநெல்வாயில்

திருக்கழிப்பாலை

திருநல்லூர்ப் பெருமணம்

திருமயேந்திரப்பள்ளி

தென்
திருமுல்லைவாயில்

திருக்கலிக்காமூர்

திருச்சாய்க்காடு

திருப்பல்லவனீச்சுரம்

திருவெண்காடு

கீழைத்
திருக்காட்டுப்பள்ளி

திருக்குருகாவூர்

சீர்காழி

திருக்கோலக்கா

திருப்புள்ளிருக்கு
வேளூர்

திருக்கண்ணார் கோயில்

திருக்கடைமுடி

திருநின்றியூர்

திருப்புங்கூர்

திருநீடூர்

அன்னியூர்

திருவேள்விக்குடி

எதிர்கொள்பாடி

திருமணஞ்சேரி

திருக்குறுக்கை

கருப்பறியலூர்

திருக்குரக்குக்கா

திருவாழ்கொளிப்
புத்தூர்

பழமண்ணிப் படிக்கரை

ஓமாம்புலியூர்

கானாட்டுமுள்ளூர்

திருநாரையூர்

திருக்கடம்பூர்

திருப்பந்தணைநல்லூர்

கஞ்சனூர்

திருக்கோடிகா

திருமங்கலக்குடி

திருப்பனந்தாள்

திருஆப்பாடி

சேய்ஞலூர்

திருந்துதேவன்குடி

திருவியலூர்

திருக்கொட்டையூர்

திருஇன்னம்பர்

திருப்புறம்பயம்

திருவிசயமங்கை

திருவைகாவூர்

வடகுரங்காடுதுறை

திருப்பழனம்

திருவையாறு

திருநெய்த்தானம்

திருப்பெரும்புலியூர்

திருமழபாடி

திருப்பழுவூர்

திருக்கானூர்

அன்பில் ஆலந்துறை

திருமாந்துறை

திருப்பாற்றுறை

திருஆனைக்கா

திருப்பைஞ்ஞீலி

திருப்பாச்சில்
ஆச்சிராமம்

திருஈங்கோய்மலை

சோழநாடு காவிரித்
தென்கரை
----------------------------------------*

திருவாட்போக்கி

கடம்பந்துறை

திருப்பராய்த்துறை

கற்குடி

திருமுக்கீச்சரம்

திருசிராப்பள்ளி

திருஎறும்பியூர்

திருநெடுங்களம்

மேலைத்
திருக்காட்டுப்பள்ளி

திருஆலம்பொழில்

திருப்பூந்துருத்தி

திருக்கண்டியூர்

திருச்சோற்றுத்துறை

திருவேதிகுடி

தென்குடித்திட்டை

திருப்புள்ளமங்கை

சக்கரப்பள்ளி

திருக்கருகாவூர்

திருப்பாலைத்துறை

திருநல்லூர்

ஆவூர்ப்பசுபதிச்சுரம்

திருச்சத்திமுற்றம்

திருப்பட்டீச்சரம்

பழையாறை வடதளி

திருவலஞ்சுழி

திருக்குடமூக்கு

குடந்தைக் கீழ்க்கோட்டம்

குடந்தைக்காரோணம்

திருநாகேச்சுரம்

திருஇடைமருதூர்

தென்குரங்காடுதுறை

திருநீலக்குடி

வைகல்மாடக்கோயில்

திருநல்லம்

திருக்கோழம்பம்

திருஆவடுதுறை

திருத்துருத்தி

திருஅழுந்தூர்

மயிலாடுதுறை

திருவிளநகர்

திருப்பறியலூர்

திருச்செம்பொன் பள்ளி

திருநனிப்பள்ளி

திருவலம்புரம்

திருத்தலைச்சங்காடு

திருஆக்கூர்

திருக்கடவூர் வீரட்டம்

திருக்கடவூர் மயானம்

திருவேட்டக்குடி

திருத்தெளிச்சேரி

திருத்தருமபுரம்

திருநள்ளாறு

திருக்கோட்டாறு

திருஅம்பர்

திருஅம்பர் மாகாளம்

திருமீயச்சூர்

இளங்கோயில்

திருத்திலதைப்பதி

திருப்பாம்புரம்

திருச்சிறுகுடி

திருவீழிமிழலை

திருவன்னியூர்

கருவிலிக் கொட்டிட்டை

பேணுபெருந்துறை

திருநறையூர்ச்
சித்தீச்சரம்

திருஅரிசிற்கரைப்
புத்தூர்

திருச்சிவபுரம்

திருக்கலயநல்லூர்

திருக்கருக்குடி

திருவாஞ்சியம்

நன்னிலம்

கொண்டீச்சரம்

திருப்பனையூர்

திருவிற்குடி வீரட்டம்

திருப்புகலூர்

திருப்புகலூர்
வர்த்தமானீச்சரம்

இராமனதீச்சரம்

திருப்பயற்றூர்

திருசெங்காட்டங்குடி

திருமருகல்

திருச்சாத்தமங்கை

திருநாகைக் காரோணம்

சிக்கல்

திருக்கீழ்வேளூர்

திருத்தேவூர்

திருப்பள்ளியின்
முக்கூடல்

திருஆரூர்

திருஆரூர் அரநெறி

திருஆரூர்ப் பரவையுண்
மண்டளி

திருவிளமர்

கரவீரம்

பெருவேளூர்

தலையாலங்காடு

திருக்குடவாயில்

திருச்சேறை

திருநாலூர் மயானம்

கடுவாய்க்கரைப் புத்தூர்

திருஇரும்பூளை

திருஅரதைப்
பெரும்பாழி

திருஅவளிவணல்லூர்

பரிதிநியமம்

திருவெண்ணியூர்

திருப்பூவனூர்

பாதாளேச்சுரம்

திருக்களர்

திருச்சிற்றேமம்

திருவுசாத்தானம்

இடும்பாவனம்

திருக்கடிக்குளம்

திருத்தண்டலை நீள்நெறி

திருக்கோட்டூர்

திருவெண்டுறை

கொள்ளம்புதூர்

திருப்பேரெயில்

திருக்கொள்ளிக்காடு

திருதெங்கூர்

திருநெல்லிக்கா

திருநாட்டியத்தான்குடி

திருக்காறாயில்

கன்றாப்பூர்

திருவலிவலம்

திருக்கைச்சினம்

திருக்கோளிலி

திருவாய்மூர்

திருமறைக்காடு

திருஅகத்தியான்பள்ளி

திருக்கோடி

ஈழ நாடு
----------------------------------------
திருக்கோணமலை

திருக்கேதீச்சரம்

பாண்டிய நாடு
----------------------------------------

திருஆலவாய்

திருஆப்பனூர்

திருப்பரங்குன்றம்

திருஏடகம்

திருக்கொடுங்குன்றம்

திருப்புத்தூர்

திருப்புனவாயில்

இராமேச்சுரம்

திருஆடானை

திருக்கானப்பேர்

திருப்பூவனம்

திருச்சுழியல்

திருக்குற்றாலம்

திருக்குறும்பலா

திருநெல்வேலி

மலை நாடு
----------------------------------------
திருஅஞ்சைக்களம்

கொங்கு நாடு
----------------------------------------
திருப்புக்கொளியூர்
(அவிநாசி)

திருமுருகன்பூண்டி

திருநணா(பவானி)

திருச்செங்குன்றூர்

திருவெஞ்சமாக்கூடல்

திருப்பாண்டிக்

கொடுமுடி

திருக்கருவூரானிலை
(கரூர்)

நடு நாடு
----------------------------------------
திருநெல்வாயில்

அரத்துறை

தூங்கானைமாடம்

திருக்கூடலையாற்றூர்

எருக்கத்தம்புலியூர்

திருத்தினைநகர்

திருச்சோபுரம்

திருஅதிகை வீரட்டானம்

திருநாவலூர்

திருமுதுகுன்றம்

திருநெல்வெண்ணெய்

திருக்கோவலூர் வீரட்டம்

அறையணிநல்லூர்

திருஇடையாறு

திருவெண்ணெய் நல்லூர்

திருத்துறையூர்

திருவடுகூர்

திருமாணிக்குழி

திருப்பாதிரிப்புலியூர்

திருமுண்டீச்சரம்

திருப்புறவார்

பனங்காட்டூர்

திருஆமாத்தூர்

திருஅண்ணாமலை

தொண்டை நாடு
----------------------------------------
திருக்கச்சி ஏகம்பம்

திருக்கச்சி மேற்றளி

ஓணகாந்தன்தளி

திருக்கச்சி

அனேகதங்காவதம்

திருக்கச்சி

நெறிக்காரைக்காடு

குரங்கணில்முட்டம்

திருமாகறல்

திருவோத்தூர்

திருவன்பார்த்தான்

பனங்காட்டூர்

திருவல்லம்

திருமாற்பேறு

திருவூறல்

இலம்பையங்கோட்டூர்

திருவிற்கோலம்

திருஆலங்காடு

திருப்பாசூர்

திருவெண்பாக்கம்

திருக்கள்ளில்

திருக்காளத்தி

திருவொற்றியூர்

திருவலிதாயம்

வட
திருமுல்லைவாயில்

திருவேற்காடு

திருமயிலாப்பூர்

திருவான்மியூர்

திருக்கச்சூர்

திருஇடைச்சுரம்

திருக்கழுக்குன்றம்

அச்சிறுபாக்கம்

திருவக்கரை

திருஅரசிலி

இரும்பைமாகாளம்

துளுவ நாடு
----------------------------------------
திருக்கோகர்ணம்

வட நாடு
----------------------------------------
திருப்பருப்பதம்

இந்திர நீலப்பருப்பதம்

திருஅநேகதங்காவதம்

திருக்கேதாரம்

திருநொடித்தான்மலை

புதிய தலம் (காவேரி
தென்கரை)
----------------------------------------
திருவிடைவாய்

ஓம் நமசிவாயா

அண்ணாமலை யாரைப் பற்றிய நூலிலும் சித்திரையே முதல் மாதம் ,.

"" அண்ணாமலை சதகத்தின் உண்மை,  சித்திரையே முதல் தொடக்கம் ""

19ம் நூற்றாண்டில் மாம்பாக்கம் உபாத்தியாயர் எனும் திருச்சிற்றம்பல நாவலரால் இயற்றப்பட்ட நூல் * அண்ணாமலை சதகம் * என்பது . இது அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்யும் நாள் , திருவண்ணாமலையில் உள்ள தீர்த்தத் தொகைகள் , திருக்கோயிலின் தலப்பெருமை,திருமுனைப் பாடி . நாட்டுச் செய்தி முதலியானவற்றை பற்றித் தெரிவிக்கின்றது . மேலும் இந்நூலில் விபூதி தரிக்கும் முறை , பிரதோஷ தரிசனம் , ருத்ராசம் அணியும் விதி , சிவபூசைக்கு உரிய பூக்கள் , சைவ மடங்களின் வகை. முதலியான செய்திகளும் உள்ளது . இந்நூலில் அண்ணாமலையாருக்குப் பௌர்ணமி தோறும் செய்யும் அபிஷேக வகை பற்றிய பாடலொன்று உள்ளது .

அந்தப் பாடல் இதோ ...

வருடாதி சித்திரைத் திங்கள்பூ ரணைநாண்
   மருக்கொழுந் தபிடேகமாம்,
வைகாசி சந்தனம தானியில் பலாப்பழமு
    மாங்கனி கதலிக்கனி,
கருதுஆடி சர்க்கரை நாலாவணியி லதிரசங்
     காணும் புரட்டாசியிற்,
காய்ச்சிய திரட்டுப்பா லைப்பசிக் கன்னமாங்
     கார்த்திகைத் தீபார்ச்சனை,
திருமார் கழிக்குநெய் தைத்தேன் குடங்கிர்தஞ்
     சேர்ந்தகம் பள மீன்மதித்,
தீந்தயிர் பரமனுக் காட்டல்விதி பூரணைத்
      திதிதோறு மாசபூசை,
யரிதா யறிந்துனக் கபிஷேக மதுபுரிந்
     தருள்பெறு வசந்தராயர்,
அண்ணாவி னிற்றுசெ யுண்ணாமுலைக்குரிய
     அண்ணா மலைத்தேவனே!

இப்பாடலில் நாவலரவர் , சித்திரைத் தொடங்கி மீன மதி ஈறாக வரிசையாக மாதங்களைக் குறிப்பிட்டுள்ளார் . சித்ரா பௌர்ணமி தொடங்கி ஒவ்வொரு பௌர்ணமியிலும் எந்தெந்தப் பொருட்களால் அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்தல் வேண்டும் என்பதைத் தெரிவித்துள்ளார் . சித்திரையில் மருக்கொழுந்தால் அபிஷேகித்தல் சிறப்பு என்கிறார் . இவருக்கு முன்னால் பதினாறம் நூற்றாண்டில் வாழ்ந்த கமலை ஞானப்பிரகாசர் என்பவர் " புட்பவிதி " எனும் நூலில் சித்திரைத் திங்களை முதலாவதாகக் கொள்ளவேண்டும் ( பாடல் 21 மற்றும் 22 ) என்றே அத்தியாயம் இயற்றியுள்ளார் .