Sunday 27 December 2015

Melur

ன்
பயணத்தில்
எப்பொழுதும் நீ
என் விழியின்
பார்வையாக ,,,,, !!!

Wednesday 23 December 2015

கிறிஸ்துமஸ் குடில்

கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் வகையில் மேலூர் கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள குடில்

Monday 21 December 2015

அன்போடு தொடருவோம், அறிந்துகொள்ள .... !! (பகுதி - 11)

🌺அன்போடு அனைவருக்கும் வணக்கம் ....!!  🙏

இயற்கை மூலம் அறிந்த இறைவனை, ஒலி மூலம் அறிய முற்பட்ட போது, ப்ரவ மந்திரமான ஓம் (அஉம்) தோன்றியது. இதன் மூலம் தன் உடலில் ஏற்படும் அற்புதத்தை உணர்ந்து. மீண்டும் மீண்டும் இயற்கையின் மூலமாக பலவிதமான ஒலிகளை அறிந்து அவற்றிக்கு வடிவம் (உச்சரிப்பு) அளித்து அதன் மூலம் . தான் உருவமாக வழிபாடு செய்துவரும் இறைவனை வழிபாடு செய்தனர்.

உதாரணமாக மந்திர ஒலிகளை ஆழ்ந்து கேட்டோம் என்றால் அவை அணைத்துமே , இயற்கையின் ஒலி அதிர்வுகளாகவே இருக்கும் .

அவ்வாறு வழிபாடு செய்யும் முறைகளை தான் பிற்காலத்தில் மந்திரம் என கூறியுள்ளார் .

இப்போது வேதத்தின் மூலத்தை அறிந்துகொள்வோம்..!

வேதம் ப்ரபஞ்சத்தின் அடையாளம் . விஞ்ஞானத்தின் வடிவம்.எதிர்கால முன்னோட்டத்தின் சாரம்.

 `வித்தை ஏதும் கல்லாதவன் என்னுள்ளே வேத நுட்பம் விளங்கிட செய்தனை`

நாம் அறிந்துள்ளவரை வேதம் நான்கு. இந்து மதத்திற்கு மட்டுமானது. உண்மை இதுவல்ல

 நாம் வழிபடுகின்ற, வணங்குகிற விக்கிரக தெய்வங்களை குறிக்கவே இல்லை.
அதாவது விஞ்ஞானத்திற்கு எது எது முக்கியமோ அந்த பஞ்ச பூதங்களை குறித்து தான் பேசுகிறது.சூரியன், வருணன், காற்று, மண், வெளி இவற்றை வணங்குகிறோம். எதற்கு? இந்த மனிதர்களுக்கு நலம் தரும் பொருட்டு உருவானதே வேதம்.

 நான்மறை என்பது நாமெல்லாம் பொதுவாக சொல்லுகிற வேதம். பைபிளுக்கும் பெயர் வேதம் தான். குரானுக்கும் பெயர் வேதம் தான்.திருக்குறளுக்கு பெயர் கூட வேதம் தான்.

இன்னும் அறிந்துகொள்ள ,...

அன்போடு தொடருவோம் , அறிந்துகொள்ள ....!!

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது.ஏன் என்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம், கர்மவினைகளால். என்னையும் சேர்த்தே ...✒

🌺அன்போடு தொடருவோம், அறிந்துகொள்ள ...,.🌺 (பகுதி - 11)

Saturday 19 December 2015

நினைவுகள் ,,. (பழைய கவிதைகளின் தொகுப்பு)

I am browsing [கிராமத்து தேவதை]. Have a look at it! http://kiraamathuthevathai.blogspot.in/search?updated-min=2012-01-01T00:00:00-08:00&updated-max=2013-01-01T00:00:00-08:00&max-results=20&m=0

அன்போடு தொடருவோம் , அறிந்துகொள்ள .... !! ( பகுதி - 10 )

அனைவருக்கும் அன்பான வணக்கம் ...!! 🙏

இறைவனுக்கு உருவ வழிபாடு எப்படி நிகழ்ந்தது என்று அறிந்தோம், இன்று மந்திரங்களும், வேதங்களும் எப்படி உருவானது என்று அறிந்துக்கொள்வோம்..

முதலில் மந்திரங்கள், வேதங்கள் என்றால் என்னா ?

 இந்தக் கேள்வியினை நீங்கள் இன்று மக்கள் மத்தியில் கேட்டீர்கள் என்றால் பொதுவாக "மந்திரங்கள், வேதங்கள் என்றால் அவை ஆன்மீகச் சிறப்புமிக்கவை. அவைகளில் மந்திரங்கள் எண்ணில் அடங்காதவை என்றும் , வேதங்கள் எண்ணிக்கையில் நான்கு என்ற விடைமட்டுமே நமக்கு கிட்டும்.

காரணம் நமது சமுகத்தில் நாம் இப்படித் தான் கற்கின்றோம். அவைகள் இறைவனின் வாக்குகளைக் கொண்டு இருக்கின்றன. சமயங்கள் அனைத்தும் அவற்றில் இருந்தே தோன்றின. இவ்வாறு தான் வேதங்களைப் பற்றியக் கருத்துக்களும்  நமக்கு கற்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

 ஆனால் இந்தக் கருத்துக்களை மறுப்பவர்களும் நம்முடைய சமுகத்தில் இருக்கத் தான் செய்கின்றனர்.

மந்திரங்களும், வேதங்களும் முதலில் எப்படி தோன்றியது என்று அறியோமானால். நம் முன்னோர்கள் இயற்கையை இறைவனாக உணர்ந்து எப்படி வழிபாடு செய்தார்களோ, அதேபோல தான் இயற்கையின் ஒலி அதிர்வுகளின் மூலம்தான் ப்ரணவ மந்திரமான அஉம் (ஓம்) மையும் உணர்ந்தார்கள்.

 அப்படி உணரப்பட்ட ஓம் (அஉம்) என்ற மந்திரத்திரத்தை உச்சரிப்பவர்களின் உள்ளத்திற்கு அமைதியையும், அறிவிற்கு கூர்மையையும் ஏற்படுத்தும்  நன்மை தரும் மின்னதிர்வுகளை உண்டாக்குகின்ற அற்புதத்தை உணர்ந்து அது இறைவனின் ஒலி வடிவமாக கருதினார்கள்.

இந்த அஉம் ஓம் இந்து மதத்தில் மட்டுமல்ல முஸ்லிம் , கிருஸ்தவர்களின், மூலமாகவும் உள்ளது .

 முஸ்லீம் மதத்தினர் அல்லஉ அக்பர் என்பார்கள்
அ (ல்லா) உ என்பது பிரணவம் அதாவது அ உ.
இஸ்லாமிய அன்பர்களும் இறைவன் (அல்லா) உருவம் இல்லாதவர் என்றே கூறுகின்றனர்.

கிருஸ்துவர்கள்  ஆமென்  என்பார்கள்  அதை எப்பொழுதும் கூறுவார்கள்.தொடக்கத்திலும் சரி பிரசங்க முடிவிலும் சரி , ஆமென் OAMen என்றார்கள். இதில் ஓம் என்பது மறைந்துள்ளதை கணலாம். ஓம் என்ற எழுத்து வடிவம் இறைவனின் அம்சமாகவே  தெரிகிறது.

அன்போடு மீண்டும் தொடருவோம் அறிந்துகொள்ள ...

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது. ஏன் என்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம், உங்கள் கர்மவினைகளால் . என்னையும் சேர்த்தே ...✒

🌺அன்போடு தொடருவோம், அறிந்துகொள்ள ,... 🌺 ( பகுதி - 10 )

மேலூர் எஸ். எம் ராஜா
9442822011

Thursday 17 December 2015

அன்போடு தொடருவோம் , அறிந்துகொள்ள ....!! ( பகுதி - 9 )

அனைவருக்கும் அன்பான வணக்கம் 🙏

யோகிகள், ஞானிகள் அல்லாத சாதாரண மனிதர்கள் மத்தியில், அவர்கள் மனங்களில் இறைவனை நிறுத்துவதற்கு உருவ வழிபாடு இன்றியமையாததாக கருதப்படுகிறது.

இறைவன் உருவம் இல்லாதவர் என்றாலும் நாம் அவரை நினைப்பதற்காகவும் வணங்குவதற்காகவும் உருவ வடிவங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

முன்பு வாழ்ந்த நம்முடைய முன்னோர்கள் நம்மை மீறிய சக்தியை உணர்ந்தார்கள், அது இந்த ப்ரபஞ்சத்தை இயக்கி கொண்டிருப்பதையும் அறிந்தார்கள். அப்படி இந்த ப்ரபஞ்சத்தை இயக்கி கொண்டிருக்கும் அந்த சக்தியைத்தான் இறைவன் என்றார்கள்.

இந்த இறைவனுக்கும் தமக்கும் இடையேயுள்ள உறவுபாலமாக இருப்பது நம்முடனே வாழ்ந்துக் கொண்டிருக்கும் இயற்கை தான் என்று அறிந்துக் வழிபாட்டில் ஈடுபட்டார்கள்.

அப்படி தானறிந்த இயற்கையின் வெளிபாடுகளின் மூலம் இறைவனின் சக்தியை உணர்ந்தார்கள். அப்படியே தான் உணர்ந்த சக்திக்கு தன்னைப் போன்றும் , தான் பார்த்துக்கொண்டு இருக்கும் அம்சங்களையும் சேர்த்தே உருவமாக மாற்றி வழிபாடு செய்தார்கள் .

இப்படி உருவான உருவங்கள் இறைவனின் தன்மைகளைக் குறிப்பவையாக அமைவதால் ஆரம்பத்தில் இறைவனைப் பற்றி அறிந்து கொள்ள உருவ வழிபாடு முக்கியமானதாகிறது.

அப்படியென்றால், இறைவனை வெவ்வேறு உருவங்களில் தரிசிக்க காரணம் என்ன? இறைவன் ஒருவரே தான்.

அவர், வடிவம் உள்ளிட்டவைகளுக்கு அப்பாற்பட்டவராயினும், சக்தியினால் பல்வேறு தொழில்களைச் செய்வதால் அவர் செய்யும் திருத்தொழில்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர் கொண்டு வெவ்வேறு உருவங்களில் வழிபடுகின்றோம்.

இதனை வாரியார் சுவாமிகள் மிக அழகாக குறிப்பிடுகிறார்.
`தங்கம் ஒன்று தான் என்றாலும் அது வெவ்வேறு வடிவங்களில் அணிகலன்களாகச் செய்யப்படும் பொழுது வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது அல்லவா?' என்று கேட்கிறார் வாரியார்.

கோவிலின் உள்ளே எத்தனை பரிவார மூர்த்திகள் இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆலய நுழைவாயில்களில் துவார பாலகர்கள் தங்களது சுட்டு விரல்களைக் காட்டி நிற்கின்றார்கள்.

மேலும் அன்புடன் தொடருவோம் ....

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது . ஏன் என்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம் , உங்கள் கர்மவினைகளால் .... என்னையும் சேர்த்தே ....✒

🌺அன்போடு தொடருவோம் ....  அறிந்துகொள்ள ....🌺(ப-9)

மேலூர் எஸ். எம் ராஜா
9442822011

Wednesday 16 December 2015

அன்போடு தொடருவோம் , அறிந்துகொள்ள .... !! (பகுதி - 8)

அனைவருக்கும் அன்பான வணக்கம் 🙏  

இந்த பிரபஞ்சத்தை பற்றி எப்படி ஒரு முடிவுக்கு வர முடிவதில்லையோ அவ்வாறே இறைவனைப் பற்றியும் ஒரு முடிவுக்கு வருதல்  மிகவும் சிரமமாகவும். இறைவனை அடைவதை இந்த  உலகம் வேறு விதமாக  பார்க்கின்றது.

ஆம் இறைவனை இவ்வுலகில் உள்ள அனைத்து மனிதர்களும் காண முடியும்.
அதற்கு யோகம்,தியானம், தவம் மற்றும் அனைத்திலும் அவரை காண்பதில் உதவி செய்கின்றது.

இறைவன் எங்கும் உள்ளான் உங்கள் உள்ளும் உள்ளான்.
எது இந்த பிரபஞ்சத்தில் உள்ளதோ அது உன்னுள்ளும் உள்ளது.(அகம் பிரம்மாஸ்மி)
நான் தான் இறைவன்/ நான் கடவுள் (அகம் பிரம்மாஸ்மி)
நீ எதை தேடுகிறாயோ அதுதான் நீ....நீ அதுவாக இருக்கிறாய்  (தத்வமசி).

நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின் மேல் , உங்களை உறுதிப்படுத்திக் கொண்டு பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பன்னி தேவனுடைய அன்பானவராக இருங்கள்.

பிரியமானவர்களே , நீ தீமையானதைப் பின்பற்றால், நன்மையானதைப் பின் பற்று. நன்மை செய்கின்றவன் தேவனாக உண்டாயிருக்கின்றான். தீமைகள் செய்கின்றவன் தேவனை காண்பதில்லை என்றும் ( அப்போஸ்தலனாகிய யூதா எழுதியுள்ளார் )

ஒருவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் அமையுமாயின் அந்த ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் செய்யப்பட்டதாகும். அதாவது ஒருவரின் செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ, அதற்குறிய பலன்தான் அவனுக்குக் கிட்டும் .
என்றும் .

இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை, மாறாக உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றார். ( என்று நபிகள் . முஸ்லிம் புகாரியில் தெரிவித்துள்ளார் )

ஆதலால் தான் நம்ம அவ்வை பாட்டியும் "உடம்பிலே உத்தமனை காண்" என்கிறார்.

நமது சித்தர்களும் இறைத் தரிசனத்தை பெற்றவர்கள் தான்.

இந்த இறை தரிசனத்தைத் தான்  ஒளி தரிசனம், இறை வெளிப்பாடு, அருட்பெரும்ஜோதி என்று பலவாறு குறிப்பிடுகின்றனர்.

இறைவனை, அல்லாவை, கர்த்தரை  காண எங்கும் செல்லத்தேவை இல்லை. ஏனில் அவன் உங்கள் உள்ளத்தில் தான் இருக்கிறான். இந்த உண்மை அனைத்து மதங்களிலும் ஒளிந்திருந்தாலும் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை.

யூதர்களின் புனித நூலும் இறைவன் அனைவரிலும் உள்ளான் என்றே குறிப்பிடுகிறது.
(இந்த யூத புனித நூலின் தாக்கத்தால் உருவானவை தான் பைபிள் மற்றும் குரான் என்று கூறப்படுகிறது).
கிருஸ்தவம் இறைவன் ஒளியாக உள்ளான் என்கிறது (God is light).
அல்லாவின் ஒளியை ஊதி அணைக்க முடியாது என்று குரானும் ஜோதி வடிவாகவே இறைவன் இருக்கின்றான் என்று இந்து மதமும் கூறுகிறது . இந்த  ஒளியையே எல்லா மதங்களும் குறிக்கின்றது.

நான் இங்கு சில மதங்களை எடுத்து காட்டுவதற்கு காரணம் அங்கும் சில ஆன்மீக விடயம் உள்ளது என்பதற்காகவே. மத்த படி மதம் ஒரு கலங்கிய குட்டை தான். அதில் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. இதற்கு எந்த ஒரு மதமும் விதி விலக்கு அல்ல .

மதத்தை பார்க்காமல் மனிதனை மனிதனாக பார்த்தலே- இறைவனுக்கு செய்யும் மிகப்பெரிய வழிபாடாகும்.

நீங்கள் எந்த இறைவனையும்,அல்லாவையும், கர்த்தரையும், சாமியையும் கும்பிடாமலும் இறை தரிசனத்தை பெற முடியும்.

யோகம், ஆன்மீகமே உங்களுக்கு உண்மையான  இறை  தரிசனத்தை காட்டும்.
உங்கள் நெற்றிகண்ணை திறக்கலாம், ஒளியை காணலாம், நீங்களும் இறைவனாகலாம்  என்ற உண்மையை உணரலாம்.

அஉம், ஓம், ஆமென்,ஆமின்  எதுவாயினும் உண்மைக்கு புறம்பாக ஏதும் செய்யாமல் , அணைத்து உயிர்களிடத்திலும், அனைத்துமஅவன் அவனாகவே எண்ணி இருந்தால் நாமும் அவனே ....

மேலும் அன்புடன் தொடருவோம் ..,..

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது . ஏன் என்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம் . உங்கள் கர்மவினைகளால் , என்னையும் சேர்த்தே ...✒

🌺அன்போடு தொடருவோம் .....     அறிந்துகொள்ள ...... 🌺(ப-8)

மேலூர் எஸ்.எம் ராஜா
9442822011

அன்போடு தொடருவோம் , அறிந்துகொள்ள ... !! (பகுதி 7)

அனைவருக்கும் அன்பான வணக்கம் 🙏

இன்று தாமதத்திற்கு வருந்துகின்றேன் ...

இன்றைய பகுதியில் இறைவன் நம்மிடம் எதை விரும்புகின்றார் என்று பார்ப்போம் ... !!

ஒரு பணக்காரனுக்கு ஒரு தோட்டம் இருந்தது. அதில் இரண்டு தோட்டக்காரர்கள் இருந்தார்கள்.

ஒருவன் சோம்பேறி. அவன் வேலையே செய்ய மாட்டான். ஆனால் எஜமான் தோட்டத்திற்கு வந்தால் போதும்; உடனே எழுந்துபோய் கைகூப்பி வணங்கியபடி எஜமானிடம், ஓ,.., என் எஜமானின் முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது! என்று புகழ் பாடி, அவர் முன்னால் பல்லை இளித்துக்கொண்டு நிற்பான்.

மற்றொரு வேலைக்காரன் அதிகம் பேசுவதே இல்லை. ஆனால் அவன் கடினமாக உழைப்பான். பல வகையான பழங்களையும் காய்கறிகளையும் பயிர் செய்து, நீண்ட தூரத்தில் வசிக்கும் தன்னுடைய எஜமானின் வீட்டிற்குச் சுமந்துகொண்டு செல்வான்.

இந்த இரண்டு தோட்டக்காரர்களில் யாரை எஜமான் அதிகம் விரும்புவார்?

இறைவன் தான் அந்த எஜமான். இந்த உலகம் அவரது தோட்டம். இங்கே இரண்டு வகையான தோட்டக்காரர்கள் இருக்கிறார்கள்.

ஒரு வகையினர் சோம்பேறிகள் - ஏமாற்றுக்காரர்கள். அவர்கள் எதுவும் செய்வதில்லை; இறைவனின் அழகான கண்களையும் மூக்கையும் மற்ற குணநலன்களையும் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள்.

ஏழைகளும், பலவீனர்களுமான எல்லா மனிதர்கள், விலங்குகள் மற்றும் அவரது படைப்புகள் அனைத்தையும் மிகுந்த கவனத்தோடு பராமரிப்பவர்கள் மற்றும் அனைத்திலும் அவனையே காண்பார்  மற்றொரு வகையினர்.

இவர்களில் யார் இறைவனின் அன்பிற்கு உரியவர்கள்? நிச்சயமாக அவருடைய பிள்ளைகளுக்குச் சேவை செய்பவர்களே இறைவனின் அன்பிற்கு உரியவர்கள்.

தந்தைக்குச் சேவை செய்ய விரும்புவர்கள், முதலில் பிள்ளைகளுக்குச் சேவை செய்ய வேண்டும். இறைவனுக்கு சேவை செய்ய விரும்புபவர்கள், முதலில் அவருடைய குழந்தைகளாகிய இந்த உலக உயிர்கள் அனைத்திற்கும் தொண்டு செய்ய வேண்டும்.

இறைவனின் தொண்டர்களுக்குச் சேவை செய்பவர்களே இறைவனின் மிகச் சிறந்த தொண்டர்கள் என்று, சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் கருத்தை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

மீண்டும் சொல்கிறேன்: மனத்தூய்மையுடன் இருங்கள்; உங்களை நாடி வரும் ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். இது நல்ல செயல். இதன் பலனாக உங்கள் இதயம் தூய்மையடையும். அதனால் எல்லோரிடமும் குடிகொண்டிருக்கும் இறைவன் உங்களிடம் வெளிப்பட்டுத் தோன்றுவார். அவர் எல்லோருடைய இதயத்திலும் எப்போதும் இருக்கிறார்.

அழுக்கும் தூசியும் படிந்த கண்ணாடியில் நாம் நம் உருவத்தைப் பார்க்க முடியாது.

அஞ்ஞானமும் தீய குணங்களும்தாம் நம் இதயம் என்ற கண்ணாடியில் படிந்திருக்கும் தூசியும் அழுக்குமாகும்.

நமது நன்மையை மட்டுமே நினைக்கும் சுயநலம், பாவங்கள் எல்லாவற்றிலும் முதல் பாவமாகும்.

நானே முதலில் சாப்பிடுவேன்; மற்றவர்களைவிட எனக்கு அதிகமாகப் பணம் வேண்டும்; எல்லாம் எனக்கே வேண்டும்; மற்றவர்களுக்கு முன்னால் நான் சொர்க்கம் போக வேண்டும்; எல்லோருக்கும் முன்னால் நான் முக்தி பெற வேண்டும் என்றெல்லாம் நினைப்பவன் சுயநலவாதி.

சுயநலம் இல்லாதவனோ, நான் கடைசியில் இருக்கிறேன். சொர்க்கம் செல்வதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் நரகத்திற்குச் செல்வதால் என் சகோதரர்களுக்கு உதவ முடியுமானால் - நான் நரகத்திற்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறான்.

இத்தகைய சுயநலமற்ற தன்மைதான் ஆன்மிகம். சுயநலம் இல்லாதவனே மேலான ஆன்மிகவாதி; அவனே இறைவனுக்கு மிக அருகில் இருக்கிறான்.

அவன் படித்தவனாக இருந்தாலும் சரி, படிக்காதவனாக இருந்தாலும் சரி - அவன் அறிந்தாலும் சரி, அறியவில்லை என்றாலும் சரி - அவனே மற்ற எல்லோரையும்விட இறைவனுக்கு மிக அருகில் இருக்கிறான்.

சுயநலம் கொண்டவன் எல்லாக் கோயில்களுக்கும் சென்று வழிபட்டிருந்தாலும், புண்ணியத் தலங்கள் அனைத்தையும் தரிசித்திருந்தாலும், சிறுத்தையைப் போல் தன் உடல் முழுவதும் மதச் சின்னங்களை அணிந்திருந்தாலும் - அவன் இறைவனிடம் இருந்து விலகியே இருக்கிறான்...

மேலும் தொடருவோம் ...

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது , ஏன் என்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம் . உங்கள் கர்மவினைகளால் , என்னையும் சேர்த்தே .... ✒

🌺அன்போடு தொடருவோம் ..... அறிந்துகொள்ள ....🌺(ப-7)

மேலூர் எஸ்.எம் ராஜா
9442822011

அன்போடு தொடருவோம் , அறிந்துகொள்ள .... !! (பகுதி - 6 )

அனைவருக்கும் அன்பான வணக்கம் ....

இன்று இறைவனை நெருக்கமாக தரிசிப்போமா ,..?

அன்பிலும், இதயத்தின் தூய்மையான பக்தியிலும்தான் மதம் வாழ்கிறதே தவிர, சடங்குகளில் மதம் வாழவில்லை. ஒருவன் உடலும் மனமும் தூய்மையாக இல்லாமல், கோயிலுக்குச் செல்வதும் இறைவனை வழிபடுவதும் பயனற்றவை.

உடலும் மனமும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை இறைவன் நிறைவேற்றுகிறார். ஆனால், தாங்களே தூய்மையற்றவர்களாக இருந்துகொண்டு, பிறருக்கு மதபோதனை செய்பவர்கள் இறுதியில் தோல்வியே அடைகிறார்கள்.

புற வழிபாடு என்பது, அக வழிபாட்டின் அடையாளம் மட்டுமே ஆகும். அக வழிபாடும் தூய்மையும்தாம் உண்மையான விஷயங்கள். இவையின்றிச் செய்யப்படும் புற வழிபாடு பயனற்றது. இதை நீங்கள் மனத்தில் பதிய வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம்; பிறகு ஒரு திருத்தலத்திற்குச் சென்றால், அந்தப் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிடும் என்று நினைக்கும் அளவிற்குக் கீழான நிலைக்கு, இந்தக் கலியுகத்தில் மக்கள் வந்துவிட்டார்கள்.

தூய்மையற்ற உள்ளத்துடன் கோயிலுக்குச் செல்லும் ஒருவன், ஏற்கெனவே தன்னிடம் இருக்கும் தன் பாவங்களுடன் மேலும் ஒன்றை அதிகப்படுத்துகிறான்; கோயிலுக்குப் புறப்பட்டபோது இருந்ததைவிட, இன்னும் மோசமானவனாக அவன் வீடு திரும்புகிறான்.

திருத்தலங்கள், புனிதமான பொருள்களாலும் மகான்களாலும் நிரம்பி இருப்பவை. மகான்கள் வாழ்கின்ற இடங்களில் கோயில் எதுவும் இல்லையென்றாலும், அந்த இடங்கள் திருத்தலங்கள்தான்.

நூறு கோயில்கள் இருந்தாலும், அங்கே புனிதமற்றவர்கள் இருப்பார்களானால் அங்கு தெய்விகம் மறைந்துவிடும்.

திருத்தலங்களில் வாழ்வதும் மிகவும் கடினமான செயலாகும். காரணம், சாதாரண இடங்களில் செய்யும் பாவங்களைச் சுலபமாக நீக்கிக்கொள்ள முடியும். ஆனால் திருத்தலங்களில் செய்யும் பாவத்தை நீக்கவே முடியாது. மனத்தைத் தூய்மையாக வைத்திருப்பதும், பிறருக்கு நன்மை செய்வதும்தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழை எளியவர்களிடமும், பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் இறைவனை காண்பவன்தான் உண்மையில் இறைவனை  வழிபடுகிறான்.

விக்கிரகத்தில் மட்டும் இறைவனை காண்பவனின் வழிபாடு ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது. ஒரே ஒரு ஏழைக்காகிலும், அவனது ஜாதி, இனம், மதம் போன்ற எதையும் பாராமல் - அவனிடம் இறைவனைக் கண்டு, அவனுக்கு உதவிகள் செய்து தொண்டாற்றுபவனிடம் இறைவன் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறார்.

கோயிலில் மட்டும் தன்னைக் காண்பவனைவிட, அவனிடம் இறைவன்  அதிக மகிழ்ச்சி கொள்கிறார்.

இறைவன் நம்மிடம் எதை விரும்புகின்றார் ...!? 

தொடருவோம் ,.,

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது . ஏன் ஏன்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம் , உங்கள் கர்மவினைகளால் . என்னையும் சேர்த்தே ....✒

🌺அன்போடு தொடருவோம் .....
      அறிந்துகொள்ள ..... 🌺 (ப-6)

மேலூர் எஸ்.எம் ராஜா
9442822011

அன்போடு தொடருவோம் , அறிந்துகொள்ள ... !! (பகுதி -5)

அனைவருக்கும் அன்பான வணக்கம் ....

இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.

அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல், இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.

நான் தினமும் நான்கு முறை குளிக்கிறேன். ஆறு முறை சுவாமி கும்பிடுகிறேன். ஆனால், இறைவன் என்னை கண்திறந்து பார்க்க மாட்டேன் என்கிறார், என்றெல்லாம் நிறைய பேர் குறைபட்டுக்கொள்கின்றனர். ஆனால், நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.

இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி. இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.

கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் .

இறைவனை நெருக்கமாக தரிசிப்போமா ,,,,? 

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது . ஏன் என்றால் உங்கள்  எண்ணங்களும் மாறுபடலாம் , உங்கள் கர்மவினைகளால் என்னையும் சேர்த்தே .....✒

🌺அன்போடு  தொடருவோம் .... இனைந்துக்கொள்ள ... 🌺 ப - 5

மேலூர் எஸ்.எம் ராஜா 9442822011