Wednesday 16 December 2015

அன்புடன் தொடருவோம் , அறிந்துகொள்ள .... !!

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்..

நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் அறிந்து உணர்ந்த ஆன்மீகம் மற்றும் சித்தர் குருமார்களைப் பற்றி வலைத்தளங்களில் எழுதப் போகின்றேன் என்று நினைக்கும் போதே,... இந்த வாய்ப்பினை அருளிய என் குருவின் பாதங்களை வணங்கிக் கொள்கிறேன் .

எனது எழுத்தாணியை எழுதத் தொடங்கி வைத்தவர். எங்களின் பூர்விகமான திருச் சூழியியல் எனும் திருச்சூழியில் அவதரித்து திருவண்ணாமலையில் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளால் பாதாள லிங்கத்தில் இருந்து பாலகனாக வெளிக்கொண்டு வரப்பட்ட 🌺 பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவர்களைப் பற்றி தான்.

🌺 " எங்கு குருவின் ஆசி பூர்ணமாக கிடைக்கின்றதோ, அங்கே விதி விளையாடாது " 🌺

இது வெறும் வார்த்தைகள் அல்ல நான் தினம், தினம் பலமுறை பார்த்து உச்சரித்த வாழ்க்கையின் வார்த்தைகள் .... ஆம் எனது நாட்டத்திற்கு வழி சொல்லி கொடுத்த ஸ்ரீபோகர் சித்த  அறக்கட்டளையின் எனது விழியின் பார்வையை வெளிச்சமாக்கிய வாக்கியங்கள் .,..

உள்ளீர உள்ள கோயிலை அறிந்து வணங்கிட முடியாமல். புறம் உள்ள கோயில்களை நாடி எண்ணிய நேரமெல்லாம் சென்றுவந்தேன். மகத்துவம் அறியாத அன்பர்கள் சிலர் வெறும் வழிபாட்டு இடமாகவே சென்று வந்ததால் . உள்ளத்தில் இவர்களும் அறியவேண்டும் என்று எண்ணிய வேளையில் என் எண்ணங்களை விட வேகமாக அறிந்துக்கொண்ட அண்ணன் திரு. ஜீ ( அவர்கள் எப்பொழுதும் மறைவு வாழ்க்கை மட்டுமே அதனால் முழுமையாக அவர்களைப் பற்றி நான் கூறமுடியாத சூழ்நிலையில் ) உலக நிகழ்வை சித்தர் பாட்டின் வாயிலாக உணர்த்தினார். ( அண்ணன் அவர்கள் தான் இன்றும் எனது தேடல்களுக்கு வழி அமைத்துக் கொடுத்து விடையளித்தும் கொண்டிருக்கின்றார். பல சித்தர் பாடல்களை நான் அறியும் வண்ணம் பொருள் உணர்த்திக் கொண்டிருக்கின்றார் ) அதைப்பற்றியத் தகவல்களுக்கு என்னுடைய முகநூல் பக்கமான 🌷அறிவோம் ஆன்மீகம்🌷 எனும் பக்கத்தில் காணலாம் .

அதேபோல் சில காலத்திற்கு 📄 வைகறை முரசு நாளிதழ் கொஞ்சம் ஆன்மீகம் எனும் பகுதியில் எழுத வாய்ப்பு அமைத்துக் கொடுத்தார் அண்ணன் ஜெயகுமார் .

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது . ஏன் என்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம்... உங்கள் கர்மவினைகளால், என்னையும் சேர்த்தே....✒

அன்போடு தொடருவோம்....
             அறிந்துகொள்ள ......

குருவின் ஆசியோடு....🌺🌺🌺 ( பகுதி 1)  தொடருவோம் ....

No comments:

Post a Comment