Wednesday 16 December 2015

அன்போடு தொடருவோம் , அறிந்துகொள்ள .... !! (பகுதி - 8)

அனைவருக்கும் அன்பான வணக்கம் 🙏  

இந்த பிரபஞ்சத்தை பற்றி எப்படி ஒரு முடிவுக்கு வர முடிவதில்லையோ அவ்வாறே இறைவனைப் பற்றியும் ஒரு முடிவுக்கு வருதல்  மிகவும் சிரமமாகவும். இறைவனை அடைவதை இந்த  உலகம் வேறு விதமாக  பார்க்கின்றது.

ஆம் இறைவனை இவ்வுலகில் உள்ள அனைத்து மனிதர்களும் காண முடியும்.
அதற்கு யோகம்,தியானம், தவம் மற்றும் அனைத்திலும் அவரை காண்பதில் உதவி செய்கின்றது.

இறைவன் எங்கும் உள்ளான் உங்கள் உள்ளும் உள்ளான்.
எது இந்த பிரபஞ்சத்தில் உள்ளதோ அது உன்னுள்ளும் உள்ளது.(அகம் பிரம்மாஸ்மி)
நான் தான் இறைவன்/ நான் கடவுள் (அகம் பிரம்மாஸ்மி)
நீ எதை தேடுகிறாயோ அதுதான் நீ....நீ அதுவாக இருக்கிறாய்  (தத்வமசி).

நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின் மேல் , உங்களை உறுதிப்படுத்திக் கொண்டு பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பன்னி தேவனுடைய அன்பானவராக இருங்கள்.

பிரியமானவர்களே , நீ தீமையானதைப் பின்பற்றால், நன்மையானதைப் பின் பற்று. நன்மை செய்கின்றவன் தேவனாக உண்டாயிருக்கின்றான். தீமைகள் செய்கின்றவன் தேவனை காண்பதில்லை என்றும் ( அப்போஸ்தலனாகிய யூதா எழுதியுள்ளார் )

ஒருவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் அமையுமாயின் அந்த ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் செய்யப்பட்டதாகும். அதாவது ஒருவரின் செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ, அதற்குறிய பலன்தான் அவனுக்குக் கிட்டும் .
என்றும் .

இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை, மாறாக உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றார். ( என்று நபிகள் . முஸ்லிம் புகாரியில் தெரிவித்துள்ளார் )

ஆதலால் தான் நம்ம அவ்வை பாட்டியும் "உடம்பிலே உத்தமனை காண்" என்கிறார்.

நமது சித்தர்களும் இறைத் தரிசனத்தை பெற்றவர்கள் தான்.

இந்த இறை தரிசனத்தைத் தான்  ஒளி தரிசனம், இறை வெளிப்பாடு, அருட்பெரும்ஜோதி என்று பலவாறு குறிப்பிடுகின்றனர்.

இறைவனை, அல்லாவை, கர்த்தரை  காண எங்கும் செல்லத்தேவை இல்லை. ஏனில் அவன் உங்கள் உள்ளத்தில் தான் இருக்கிறான். இந்த உண்மை அனைத்து மதங்களிலும் ஒளிந்திருந்தாலும் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை.

யூதர்களின் புனித நூலும் இறைவன் அனைவரிலும் உள்ளான் என்றே குறிப்பிடுகிறது.
(இந்த யூத புனித நூலின் தாக்கத்தால் உருவானவை தான் பைபிள் மற்றும் குரான் என்று கூறப்படுகிறது).
கிருஸ்தவம் இறைவன் ஒளியாக உள்ளான் என்கிறது (God is light).
அல்லாவின் ஒளியை ஊதி அணைக்க முடியாது என்று குரானும் ஜோதி வடிவாகவே இறைவன் இருக்கின்றான் என்று இந்து மதமும் கூறுகிறது . இந்த  ஒளியையே எல்லா மதங்களும் குறிக்கின்றது.

நான் இங்கு சில மதங்களை எடுத்து காட்டுவதற்கு காரணம் அங்கும் சில ஆன்மீக விடயம் உள்ளது என்பதற்காகவே. மத்த படி மதம் ஒரு கலங்கிய குட்டை தான். அதில் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. இதற்கு எந்த ஒரு மதமும் விதி விலக்கு அல்ல .

மதத்தை பார்க்காமல் மனிதனை மனிதனாக பார்த்தலே- இறைவனுக்கு செய்யும் மிகப்பெரிய வழிபாடாகும்.

நீங்கள் எந்த இறைவனையும்,அல்லாவையும், கர்த்தரையும், சாமியையும் கும்பிடாமலும் இறை தரிசனத்தை பெற முடியும்.

யோகம், ஆன்மீகமே உங்களுக்கு உண்மையான  இறை  தரிசனத்தை காட்டும்.
உங்கள் நெற்றிகண்ணை திறக்கலாம், ஒளியை காணலாம், நீங்களும் இறைவனாகலாம்  என்ற உண்மையை உணரலாம்.

அஉம், ஓம், ஆமென்,ஆமின்  எதுவாயினும் உண்மைக்கு புறம்பாக ஏதும் செய்யாமல் , அணைத்து உயிர்களிடத்திலும், அனைத்துமஅவன் அவனாகவே எண்ணி இருந்தால் நாமும் அவனே ....

மேலும் அன்புடன் தொடருவோம் ..,..

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது . ஏன் என்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம் . உங்கள் கர்மவினைகளால் , என்னையும் சேர்த்தே ...✒

🌺அன்போடு தொடருவோம் .....     அறிந்துகொள்ள ...... 🌺(ப-8)

மேலூர் எஸ்.எம் ராஜா
9442822011

1 comment: