Wednesday 16 December 2015

அன்புடன் தொடருவோம் , அறிந்துகொள்ள ..... !! (பகுதி -2)

அனைவருக்கும் வணக்கம் ....!!

ஆன்மீகத்தை பற்றி நான் அவ்வளவாக அறியவில்லை, முழுமையாக அறிந்துகொள்ள நம் கண்களுக்கு தெரியும் பொருட்கள் போல அல்ல ஆன்மீகம் . நம் உணர மட்டுமே முடியும் . சிலர் கேட்கலாம் ஏன் ஆன்மீகம் இல்லாமல் நம் வாழமுடியாதா என்று ? வாழலாம் ஆனாலும் அவர்கள் கண்டிப்பாக ஆன்மீக உணர்வுகளோடு வாழ்ந்துக்கொண்டிருப்பார்கள் ..,..

மனிதன் சுவாசிக்க காற்று தேவையான ஒன்று , அது இல்லாமல் நாம் ஒரு நிமிடமாவது வாழ முடியுமா ,? முடியும் என்பவர்களே ஆன்மீகம் இல்லை என்று வாழ்பவர்கள். ஆம் காற்று இல்லாமல் வாழ அந்த ஒரு நிமிடத்தை மூச்சை அடக்கி , காற்றின் அவசியத்தை  உணர்ந்துக் கொண்டிருப்பவர்கள் போலத்தான் இவர்களும். வெளியில் இருந்து பார்க்கும் நாம் அவர்கள் மூச்சை அடக்கி இருப்பவர்கள் போலத்தான் தெரியும் . ஆனால் உண்மை அதுவல்ல அவர்களுக்காக அவர்களின் ஆத்மா இருக்கும் பூத உடலுக்காக உள்ளே சுவாசம் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கும் .

சரி இந்த ஆன்மீகம் ஆன்மீகம் என்று சொல்கின்றோமே... அந்த ஆன்மீகம் என்றால் என்னா என்று பார்ப்போம் ....

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது . ஏன் என்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம்...
உங்கள் கர்மவினைகளால்,
என்னையும் சேர்த்தே,....✒

🌺அன்போடு தொடருவோம்....
           அறிந்துகொள்ள .....🌺

No comments:

Post a Comment