Monday 21 December 2015

அன்போடு தொடருவோம், அறிந்துகொள்ள .... !! (பகுதி - 11)

🌺அன்போடு அனைவருக்கும் வணக்கம் ....!!  🙏

இயற்கை மூலம் அறிந்த இறைவனை, ஒலி மூலம் அறிய முற்பட்ட போது, ப்ரவ மந்திரமான ஓம் (அஉம்) தோன்றியது. இதன் மூலம் தன் உடலில் ஏற்படும் அற்புதத்தை உணர்ந்து. மீண்டும் மீண்டும் இயற்கையின் மூலமாக பலவிதமான ஒலிகளை அறிந்து அவற்றிக்கு வடிவம் (உச்சரிப்பு) அளித்து அதன் மூலம் . தான் உருவமாக வழிபாடு செய்துவரும் இறைவனை வழிபாடு செய்தனர்.

உதாரணமாக மந்திர ஒலிகளை ஆழ்ந்து கேட்டோம் என்றால் அவை அணைத்துமே , இயற்கையின் ஒலி அதிர்வுகளாகவே இருக்கும் .

அவ்வாறு வழிபாடு செய்யும் முறைகளை தான் பிற்காலத்தில் மந்திரம் என கூறியுள்ளார் .

இப்போது வேதத்தின் மூலத்தை அறிந்துகொள்வோம்..!

வேதம் ப்ரபஞ்சத்தின் அடையாளம் . விஞ்ஞானத்தின் வடிவம்.எதிர்கால முன்னோட்டத்தின் சாரம்.

 `வித்தை ஏதும் கல்லாதவன் என்னுள்ளே வேத நுட்பம் விளங்கிட செய்தனை`

நாம் அறிந்துள்ளவரை வேதம் நான்கு. இந்து மதத்திற்கு மட்டுமானது. உண்மை இதுவல்ல

 நாம் வழிபடுகின்ற, வணங்குகிற விக்கிரக தெய்வங்களை குறிக்கவே இல்லை.
அதாவது விஞ்ஞானத்திற்கு எது எது முக்கியமோ அந்த பஞ்ச பூதங்களை குறித்து தான் பேசுகிறது.சூரியன், வருணன், காற்று, மண், வெளி இவற்றை வணங்குகிறோம். எதற்கு? இந்த மனிதர்களுக்கு நலம் தரும் பொருட்டு உருவானதே வேதம்.

 நான்மறை என்பது நாமெல்லாம் பொதுவாக சொல்லுகிற வேதம். பைபிளுக்கும் பெயர் வேதம் தான். குரானுக்கும் பெயர் வேதம் தான்.திருக்குறளுக்கு பெயர் கூட வேதம் தான்.

இன்னும் அறிந்துகொள்ள ,...

அன்போடு தொடருவோம் , அறிந்துகொள்ள ....!!

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது.ஏன் என்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம், கர்மவினைகளால். என்னையும் சேர்த்தே ...✒

🌺அன்போடு தொடருவோம், அறிந்துகொள்ள ...,.🌺 (பகுதி - 11)

No comments:

Post a Comment