Sunday 31 January 2016

அருட் பெரு ஜோதி வள்ளலார் - மேலூர் ராஜா

வடலூர் சத்தியஞான சபையில் ஏழுதிரை நீக்கி ஜோதி தரிசனம்


வடலூர் சத்தியஞான சபையில் ஏழுதிரை நீக்கி ஜோதி தரிசனம்

கருப்புத்திரை இறையை மறைக்கிறது

நீலத்திரை உயிராகிய ஆன்மாவை மறைக்கிறது

பச்சைத்திரை பரவெளியை மறைக்கிறது

சிவப்புத்திரை சிதாகாசவெளியை மறைக்கிறது

பொன்மைத்திரை பரம்பொருள் உள்ள வெளியை மறைக்கிறது

வெண்மைத்திரை மெய்ப்பதியை மறைக்கிறது

கலப்புத்திரை இந்திரிய கரண அனுபவங்களை மறைக்கிறது
இப்படி தத்துவங்கள் 36 அவற்றின் தாத்துவிகங்கள் 60 சேர்த்து 96 அனுபவநிலைகளை மறைக்கும் திரைகளை நீக்கி ஆன்மப்பிரகாசத்தை அகத்தில் காணும் அனுபவமே ஏழுதிரை நீக்கிக் காட்டப்படும் வடலூர் ஜோதி தரிசனம்

உலகிலேயே வடலூரில் மட்டுமே காட்டப்படும் அற்புத நிகழ்ச்சி
அதிகாலை ஆறுமணிக்குக் காட்டப்படும் இந்த ஜோதியைக் காண வானுலக தேவர்கள் மற்றும் சித்தர்கள் வடலூர் பெருவெளியில் சூட்சும நிலையில் நின்று காண வருவதாக வள்ளலார் அன்பர்கள் கருதுவர்

No comments:

Post a Comment