Friday 9 August 2013

அம்மா

பத்தியமாய் இருந்து
என்னை பத்திரமாய்.....
பத்துதிங்களாய்
என்னை பொத்தி பொத்தி வைத்து..
என் உடல்
சினுங்ககூடாது  என்று
அன்னநடையாய்
நடந்து ...
நான் பூமித்தாயை கானும் முன்னே...
என்னை
பூ போல பாதுகாப்பாய் பெற்றவளே....
என் பசியறிந்து
உன் குருதியையும்
பாலாய் மாற்றி
என்னை புசிக்க வைத்தாய் ...
வீரநடை
நான் போட உன் விரல் தந்து ..
அறியாதோர்
முகம் கண்டு நான் வீரிட்டு அழுகையிலே...
உன் கரம்
அரவனைப்பில் என்னை காத்தவளே....
எப்போது உன்னைய்
காக்கப்போகிறேன் என்கரம்
கொண்டே...

No comments:

Post a Comment