Monday 7 October 2013

இது தான் காதல்

பலரின்
நினைப்பு மறந்து
ஒருவரின் நினைப்பே தொடர்ந்தால்
இது தான்
காதலோ....
கூறிய வேலைகள் அனைத்தையும்
மறந்து தொல்லையடா நீ
எனக்கு என
திட்டு வாங்கினால்
இது தான்
காதலோ...
பார்க்கும்
பாவைகள் அனைவரையும்
தன்னவளின் உருவமாகவே தோன்றினால்
இது தான் காதலோ.....
கேட்கும்
இன்னிசை அனைத்தும்
தனக்காகவே படைக்கப்பட்டது
என தோன்றினால்
இது தான்
காதலோ......
வார்த்தைகள்
அனைத்தும் தேடி
எழுதி கசங்கிய
காகிதம் கூட கல்வெட்டாக
மாறினால்
இது தான்
காதலோ.......
பேசி புன்னகைக்க
பலர் சுற்றியிருந்தும்
அருகில் இல்லாத
ஒருவரின் புன்னகை மட்டும்
அதிசியத்தால்
இது தான்
காதலோ.....
பசிமட்டுமல்ல
ராத்தூக்கமும் தோலைத்த பின் இமைகள் மூடியிருந்தாலும் நெஞ்சில் ஒருவரின் நினைவுகள் மட்டும் நீந்தினால்
இது தான்
காதலோ.....
அழைப்புகள்
வராதபோதும்
நொடிக்கு ஒருமுறை
ஆவலோடு கைப்பேசியை
கொண்டிருந்தால்
இது தான்
காதலோ.....
இத்தனை துன்பமும்
இன்பமாய் மாறினால்
இதற்கு பெயர்தான்
காதலோ..

4 comments:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_8.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  2. மிக்க நன்றி அண்ணா தங்களின் வாழ்த்தை குரு எனக்கு அளித்த ஆசிர்வாதமாகவே என்னுகின்றேன்...
    மேலும் இந்தவார ஆசிரியர் தென்றல் சசிகலா அவர்கள் உருவாக்கியவன் தான் இந்த தென்றலின்வாசம் என்னும் நான்..
    வாழ்த்துங்கள் வளர்கின்றேன்..
    நன்றி அண்ணா..

    ReplyDelete
  3. மிக்க நன்றி அண்ணா தங்களின் வாழ்த்தை குரு எனக்கு அளித்த ஆசிர்வாதமாகவே என்னுகின்றேன்...
    மேலும் இந்தவார ஆசிரியர் தென்றல் சசிகலா அவர்கள் உருவாக்கியவன் தான் இந்த தென்றலின்வாசம் என்னும் நான்..
    வாழ்த்துங்கள் வளர்கின்றேன்..
    நன்றி அண்ணா..

    ReplyDelete
  4. ithelam unga wife parththu azhuthal athum kathal than .....unga wife unga mela vacha kaathal

    ReplyDelete