Saturday 12 October 2013

அலைபேசியின் ஏக்கம்..

என் மனது மட்டுமல்ல
எனது அலைபேசியும்
ஏங்குகிறது உன் அழைப்பிற்காகவே...

மௌனமாகி போனதோ
உன் மனதை போல
உனது அலைப்பேசியும் ....

பல நூறுகுறுந்தகவல்
மட்டுமில்லை எனது மனதும்தான்
காத்திருக்கின்றது உனக்காக ........

இதயங்களால் பேசும் வார்த்தைகளை உனக்காக அழைத்துவரும் இதயஓட்டமும் நின்றதோ  உன்
மௌனத்தால்...

உனது வார்த்தைகளை கேட்காமல் இங்கு உயிரற்றுப் போனது நான் மட்டுமல்ல எனது அலைபேசியும் தான்.

உனது அழைப்பால் உயிர்பெறுவது
நான் மட்டுமல்ல எனது அலைபேசியும் தான் .......

3 comments:

  1. தங்களின் வருகையால் மிக்க மகிழ்வு அண்ணா...
    நன்றிகள்..

    ReplyDelete
  2. அருமை வாழ்த்துகள் ராஜா

    ReplyDelete
  3. நன்றி ....
    தங்களின் வாழ்த்தால் அகம் மகிழ்ந்தோம்...

    ReplyDelete