Thursday 30 January 2014

பட்டிணத்தார் பாடல்கள்

பட்டினத்தார் புலம்பல்
மென்று விழுங்கி விடாய்கழிக்க
நீர்தேடல்
என்று விடியும்
எனக்கு எங்கோவேநன்றி
கருதார் புரமூன்றும் கட்டழலால்
சென்ற
மருதாஉன் சந்நிதிக்கே வந்து.
கண்டம் கரியதாம்;
கண்மூன்று உடையதாம்
அண்டத்தைப் போல
அழகியதாம்தொண்டர்
உடல்உருகத் தித்திக்கும் ஓங்குபுகழ்
ஒற்றிக்
கடலருகே நிற்கும் கரும்பு.
ஓடுவிழுந்து சீப்பாயும் ஒன்பதுவாய்ப்
புண்ணுக்கு
இடுமருந்தை யான்அறிந்து கொண்டேன்கடுஅருந்தும்
தேவாதி தேவன் திருவொற்றியூர்த்
தெருவில்
போவார் அடியிற் பொடி.
வாவிஎல்லாம் தீர்த்தம்; மணல்எல்லாம்
வெண்நீறு
காவனங்கள் எல்லாம்
கணநாதர்;பூவுலகில்
ஈது சிவலோகம்
என்றென்றே மெய்த்தவத்தோர்
ஓதும் திருவொற்றி யூர்.
ஆரூரர் இங்கிருந்த அவ்வூர்த்
திருநாளென்று
ஊரூர்கள் தோறும் உழலுவீர்! நேரே
உளக்குறிப்பை நாடாத ஊமர்காள் நீவீர்
விளக்கிருக்கத் தீத்தேடு வீர்.
எருவாய்க்கு இருவிரல்மேல்
ஏர்உண்டு இருக்கும்
கருவாய்க்கோ கண்கலக்கப் பட்டாய்!
திருவாரூர்த்
தேரோடும் வீதியிலே செத்துக்
கிடக்கின்றாய்
நீரோடும் தாரைக்கே நீ!
எத்தனைஊர்
எத்தனைவீடு எத்தனைதாய்?
பெற்றவர்கள்
எத்தனைபேர் இட்டழைக்க
ஏன்என்றேன்நித்தம்
எனக்குக் களையாற்றாய் ஏகம்பா;
கம்பா
உனக்குத் திருவிளையாட் டோ?
அத்திமுதல் எறும்பீ றானவுயிர்
அத்தனைக்கும்
சித்தம் மகிழ்ந்தளிக்கும் தேசிகாமெத்தப்
பசிக்குதையா! பாவியேன்
பாழ்வயிற்றைப் பற்றி
இசிக்குதையா காரோண ரே!
பொய்யை ஒழியாய்;
புலாலை விடாய்; காளத்தி
ஐயரை எண்ணாய்;
அறம்செய்யாய்;வெய்ய
சினமே ஓழியாய்;
திருவெழுத்தைந்து ஓதாய்;
மனமே உனக்கென்ன மாண்பு?
மண்ணும் தணல்ஆற வானும்
புகைஆற
எண்ணறிய தாயும்
இளைப்பாறப்பண்ணுமயன்
கையாறவும் அடியேன் காலாறவும்
காண்பார்
ஐயா! திருவை யாறா!
காலன் வருமுன்னே கண்பஞ்
சடையுமுன்னே
பாலுண் கடைவாய்ப்
படுமுன்னேமேல்விழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார்
சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு!
சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம்தேடி விட்டோமேநித்தம்
பிறந்தஇடம் தேடுதே பேதைமட
நெஞ்சம்
கறந்தஇடம் நாடுதே கண்!
தோடவிழும் பூங்கோதைத்
தோகைஉனை இப்போது
தேடினவர் போய்விட்டார்
தேறியிருநாடிநீ
என்னை நினைத்தால் இடுப்பில்
உதைப்பேன்நான்
உன்னை நினைத்தால் உதை!
வாசற் படிகடந்து வாராத
பிச்சைக்குஇங்
காசைப் படுவதில்லை அண்ணலே!
ஆசைதனைப்
பட்டிறந்த காலமெல்லாம் போதும்
பரமேட்டி
சுட்டிறந்த ஞானத்தைச் சொல்.
நச்சவரம் பூண்டானை நன்றாய்த்
தொழுவதுவும்
இச்சையிலே தான்அங்
கிருப்பதுவும்பிச்சைதனை
வாங்குவதும் உண்பதுவும்
வந்துதிரு வாயிலில்
தூங்குவதும் தானே சுகம்.
இருக்கும்
இடம்தேடி என்பசிக்கே அன்னம்
உருக்கமுடன் கொண்டு வந்தால்
உண்பேன்பெருக்க
அழைத்தாலும் போகேன் அரனே!
என்தேகம்
இளைத்தாலும் போகேன் இனி.
விட்டுவிடப் போகுதுயிர்!
விட்டஉடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார்
சுற்றத்தார்அட்டியின்றி
எந்நேர மும்சிவனை ஏற்றுங்கள்;
போற்றுங்கள்;
சொன்னேன் அதுவே சுகம்.
ஆவியோடு காயம் அழிந்தாலும்
மேதினியில்
பாவி என்று நாமம் படையாதே!
மேவியசீர்
வித்தாரமும் கடம்பும்
வேண்டா மடநெஞ்சே
செத்தாரைப் போலே திரி.
வெட்ட வெளியாய் வெளிக்கும்
தெரியாது!
கட்டளையும் கைப்பணமும் காணாது!
இட்டமுடன்
பற்றென்றால் பற்றாது;
பாவியே நெஞ்சில்
அவன் இற்றெனவே வைத்த இனிப்பு.
இப்பிறப்பை நம்பி இருப்பாயோ நெஞ்சமே!
வைப்பிருக்க
வாயில்மனை இருக்கச்சொப்பனம்போல
விக்கிப்பற் கிட்டக்கண்
மெத்தப்பஞ்சிட்டு அப்பைக்
கக்கிச்செத் துக்கொட்டக் கண்டு.
மேலும் இருக்க விரும்பினையே!
வெண்விடையோன்
சீலம் அறிந்திலையே! சிந்தையே!
கால்கைக்குக்
கொட்டையிட்டு மெத்தையிட்டு குத்திமொத்தப்
பட்டஉடல்
கட்டையிட்டுச் சுட்டுவிடக் கண்டு.
ஒன்பது வாய்த்
தோல்பைக்கு ஒருநாளைப் போலவே
அன்புவைத்து நெஞ்சே அலைந்தாயே!
வன்கழுக்கள்
தத்தித்தத் திச்செட்டை தட்டிக்காட்
டிப்பிட்டுக்
கத்திக்குத் தித்தின்னக் கண்டு.
இன்னம் பிறக்க
இசைவையா நெஞ்சமே?
மன்னரிவர்
என்றிருந்து வாழ்ந்தாரைமுன்னம்
எரிந்தகட்டை மீதில்
இணைக்கோ வணத்தை
உரிந்துருட்டிப் போட்டது கண்டு!
முதற்சங்கு அமுதூட்டும்!
மொய்குழலார் ஆசை
நடுச்சங்கு நல்விலங்கு பூட்டும்!
கடைச்சங்கம்
ஆம்போ ததுஊதும்! அம்மட்டோ,
இம்மட்டோ,
நாம்பூமி வாழ்ந்த நலம்?
எத்தனை நாள்கூடி எடுத்த
சரீரம்இவை?
அத்தனையும் மண்தின்ப தல்லவோ?
வித்தகனார்
காலைப் பிடித்துமெள்ளக்
கங்குல்பகல் அற்றிடத்தே
மேலைக் குடியிருப் போமே!
எச்சிலென்று சொல்லி இதமகிதம்
பேசாதீர்
எச்சில் இருக்கும்
இடம்அறியீர்எச்சில்தனை
உய்த்திருந்து பார்த்தால்
ஒருமை வெளிப்படும்; பின்
சித்த நிராமயமா மே!
எத்தனைபேர் நட்டகுழி? எத்தனைபேர்
தொட்டமுலை?
எத்தனைபேர் பற்றி இழுத்தஇதழ்?
நித்தம்நித்தம்
பொய்யடா பேசும்புவியின்
மடமாதரை விட்டு
உய்யடா! உய்யடா! உய்!
இருப்பதுபொய் போவதுமெய்
என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை எண்ணாதே!
பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப
நாய்நரி பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான்!
எத்தொழிலைச் செய்தாலும்
ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர்மனம் இருக்கும்
மோனத்தேவித்தகமாய்க்
காதிவிளை யாடிஇரு கைவீசி வந்தாலும்
தாதிமனம் நீர்க்குடத்தே தான்!
மாலைப் பொழுதில்நறு மஞ்சள்
அரைத் தேகுளித்து
வேலை மெனக்கிட்டு விழித்திருந்துகுலாகிப்
பெற்றாள்; வளர்ந்தாள்; பெயரிட்டாள்;
பெற்றபிள்ளை
பித்தானால் என்செய்வாள் பின்?

4 comments:

  1. // அத்தனையும் மண்தின்ப தல்லவோ? //

    அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மிகுந்த நன்றிகள் அண்ணா .......

    ReplyDelete