உனது வருகையால்
எனது,
நிழல் கூட
என்னை விட்டு மறைந்து விடுகின்றது ....
மண்
குளிர வேண்டிய
வேளையில் ...
உனது
வருகையால்..
நான் குளித்துக் கொண்டிருக்கின்றேன்,
வியர்வையின் மூலம் ....
போதும்
உன் தண்டனை
இயற்கையை அழித்தமைக்கு
நீ
பார்க்கும் கோரப்பார்வை....
ஆறு, குளம்
வறண்ட நிலைமை...
இப்போது
என்னுள்ளும் எழுகின்றதே....
மறைந்து விடு
கதிரவனே ....
எங்கள்
வளம் செழிக்க
மழை மேகத்தினை
அனுப்பிவிட்டு .....
அக்கினி வெயிலின் தாக்கத்தால்..
அன்புடன்
மேலூர் ராஜா..
No comments:
Post a Comment