Wednesday 9 May 2018

வாழ்க்கை

வலிகள் நிறைந்த
வாழ்க்கையை
வாழ
கற்றுக்கொடுத்துவிட்டாய்....

புன்னகையோடு
நீ
பேசிய தருணங்கள்....

இப்பொழுது
நினைவுகளாக என்னுள்,,...

நீ
அளித்த
செல்லக் குட்டல்கள்,,,,

இப்பொழுது
நினைவுகளான என்னுள்.....

நீ
அளித்த
சில நொடி மௌனம் ....

இப்பொழுது
என்னுள் நினைவுகளாக,,,,

உன்னைவிட்டு
ஒரு
நொடிக்கூட
பிரிய மாட்டேன் என
நீ கூறிய
வார்த்தைகள் மட்டும் ....

இப்பொழுதும்
என்னுள் நிஜங்களாக ....

உன்
நினைவுகளால்
ஒரு நொடிக் கூட
என்னை விட்டு
பிரியாமல்
நீ
இருப்பதால் .....

அன்புடன்
மேலூர் ராஜா.....

No comments:

Post a Comment