நீ,...
மௌனம் மூலம்
அறிமுகமான பொழுது
எனக்கு தெரியவில்லை ....
எனது
வாழ்க்கையும்
மௌனமாகும் என்று.....
நம்
காதல்
பயணத்தில்,....
ஆண்டுகள் பல
கடந்திருந்தாலும்....
இரண்டு, மூன்று
முறையேனும் மட்டுமே
முகம்
அறிந்து பேசியிருப்போம்.....
ஆனாலும்
ஒரு நொடி பொழுதேனும்
பேசாமல் இருந்ததில்லை....
நீண்ட
மௌனங்கள் ....
உன்னிடம்
நான் பெற்றப்பொழுதெல்லாம்
காதல் மட்டுமே
நம்முடன்
அதிகரித்துக் கொண்டிருந்தது....
ஆனால்
இப்பொழுது இருக்கும் மௌனம் ......
என்னிடம் மட்டும்
நம்
காதல் நினைவுகளோடு.....
அன்புடன்
மேலூர் ராஜா....
No comments:
Post a Comment