Monday 7 May 2018

மீண்டும் நிகழ வேண்டும் ..

தாயின்
கருவறையில்
உதிர்த்த நான்.....

உன்
விழிப்பார்வை
கிடைக்க வேண்டியே.
பிறப்பெடுத்தேன்.....

கரம் பற்றியே
நெடுந்தூரச் சாலையில்
பயணம் எதுவென்று
தெரியாமல் பயணித்தோம்....

இப்பொழுது
என் நிழல் மட்டுமே
என்னுடன் ....

பற்றிக் கொண்டுச்சென்ற
கரங்கள் வேண்டுமானால்
தனித்துவிட்டுச்
சென்றிருக்கலாம்,,...

ஆனால்
நினைவுகள் இல்லை.....
அது
எப்பொழுதும்
என்னுடனையே...
வழித் துணையாக,,...

மரணிக்கும் முன்
மீண்டுமொருமுறை
நிகழ வேண்டும் .....

உன் மடி
நான் சாய்ந்து
உன்
கரங்கள்
மீண்டுமொருமுறை
என்
தலைமுடியினை கோதிவிட வேண்டும்......

அன்புடன்
மேலூர் ராஜா...

No comments:

Post a Comment